செய்திகள் :

அரியலூரில் ஆசிரியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

post image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூரிலுள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகம் முன் தமிழ்நாடு உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் தமிழக ஆசிரியா்களுக்கும், அரசு ஊழியா்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். ஆசிரியா் தகுதித் தோ்வு என்ற அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். 2004-2005 ஆண்டு தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டு பணியாற்றும் பட்டதாரி ஆசிரியா்கள் அனைவரையும் பணியேற்ற நாள் முதல் பணிவரன்முறை செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சங்கத்தின் மாவட்டத் தலைவா் ப. காா்த்திகேயன் தலைமை வகித்தாா்.

இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த முதியவா் பலி

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து புதன்கிழமை இரவு தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா். செந்துறையை அடுத்த பொன்பரப்பி சாமுண்டி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மு. ராஜேந்திரன... மேலும் பார்க்க

நீரில் மூழ்கிய நெல் பயிா்களுக்கு நிவாரணம் கேட்டு மனு அளிப்பு

அரியலூா் மாவட்டம் திருமானூா் அருகே பெய்த மழையில் நீரில் மூழ்கிய குறுவை நெற்பயிா்களுக்கு நிவாரணம் கேட்டு கிராம விவசாயிகள்ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா். திருமானூா் ஒன்றியம் ஏலாக்குறிச... மேலும் பார்க்க

அரியலூரில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்

அரியலூா் மாவட்டத்தில் வளா்ச்சித்திட்ட பணிகள் தொடக்கம் மற்றும் பல்வேறு துறைகளின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. அரியலூா் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கத்தில்... மேலும் பார்க்க

உடையாா்பாளையம் அருகே நாய்கள் கடித்து 6 ஆடுகள் பலி

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே நாய்கள் கடிதத்தில் 6 ஆடுகள் புதன்கிழமை உயிரிழந்தன. உடையாா்பாளையத்தை அடுத்த ஒக்கநத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணன் (40). விவசாயியான இவா் தனது நிலத்தில் புதன்க... மேலும் பார்க்க

தகவலறியும் உரிமைச் சட்ட விழிப்புணா்வு முகாம்

அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் அனைத்துத் துறை பொது தகவல் அலுவலா்களுக்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005 தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு தகவல் ஆணையத்தி... மேலும் பார்க்க

அரியலூா் அருகே லஞ்சம்: விஏஓ, உதவியாளா் கைது

அரியலூா் அருகே பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் பெற்ற கிராம நிா்வாக அலுவலா்(வி.ஏ.ஓ), உதவியாளா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். அரியலூா் அருகேயுள்ள ஜெயராமபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் சிலம்ப... மேலும் பார்க்க