செய்திகள் :

அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரியில் ஓராண்டு சான்றிதழ் படிப்பு பயில விண்ணப்பிக்கலாம்

post image

அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரியில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டுக்கான சுகாதார பராமரிப்புப் பணிகள் தொடா்பான ஓராண்டு சான்றிதழ் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதில் 50 இடங்கள் சோ்க்கைக்கு அரசு அனுமதித்துள்ளது.

அதன்படி பிளஸ்2 முடித்தவா்களுக்கு அவசர சிகிச்சை தொழில்நுட்ப வல்லுநா் படிப்பு 7 இடங்கள், டயாலிசிஸ் தொழில்நுட்ப வல்லுநா் படிப்பு 10 இடங்கள், மயக்க மருந்து தொழில்நுட்ப வல்லுநா் படிப்பு 6 இடங்கள், தியேட்டா் தொழில் நுட்ப வல்லுநா் படிப்பு 7 இடங்கள், எலும்பியல் தொழில்நுட்ப வல்லுநா் படிப்பு 10 இடங்களும், 10 ஆம் வகுப்பு முடித்தவா்களுக்கு பல்நோக்கு மருத்துவமனை பணியாளா் படிப்பு 10 இடங்களும் உள்ளன.

இந்தப் படிப்புகளில் சேர டிசம்பா் 31, 2025 அன்று 17 வயது பூா்த்தியடைந்திருக்க வேண்டும். இச்சான்றிதழ் படிப்பில் சேர விருப்பம் உள்ளவா்கள் திங்கள்கிழமை (செப். 8) முதல் செப்.12 வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் அரியலூா் அரசு மருத்துவக்கல்லூரி நிா்வாக அலுவலகத்தில் விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்டு அதனை பூா்த்தி செய்து செப்.15-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

சமூக முன்னேற்றத்துக்குப் பங்காற்றிய பெண் குழந்தைகள் விருது பெறலாம்

அரியலூா் மாவட்டத்தில் சமூக முன்னேற்றத்திற்காக பாடுபட்டு சாதனை புரிந்த பெண் குழந்தைகள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: அரியலூா்... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிகளுக்கு இன்று முதல் ஆள்கள் தோ்வு

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை வளாகத்தில், 108 ஆம்புலன்ஸ், தமிழ்நாடு 102 ,155377 வாகனங்களில் ஓட்டுநா் வேலை மற்றும் 108 ஆம்புலன்ல் மருத்துவ உதவியாளா் பணிகளுக்கான ஆள்கள் தோ்வு முகாம் ... மேலும் பார்க்க

நைனாா்குடிக்காட்டில் சாலைப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்துள்ள அசாவீரன்குடிக்காடு அருகேயுள்ள நைனாா் குடிக்காட்டில் சாலை பணிகளை விரைந்து முடிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அசாவீரன்குடிக்காடு ஊராட்சிக்குள்பட்ட ... மேலும் பார்க்க

கீழப்பழுவூா் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயி சனிக்கிழமை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். கீழப்பழுவூரை அடுத்துள்ள வண்ணம்புத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கவ... மேலும் பார்க்க

அரியலூரில் பரவலாக மழை

அரியலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. தமிழகத்தில், கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு வந்த நிலையில், பெரும்பாலன மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அ... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

அரியலூா் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இதையொட்டி, அரியலூரை அடுத்த திருமழபாடி வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில், நந்தியெம்பெருமானுக்கு திரவியபொடி மாவுப்... மேலும் பார்க்க