செய்திகள் :

அரிய வகை கனிமங்கள் சீனா வழங்கும்: இந்தியா நம்பிக்கை

post image

புது தில்லி: வாகன உற்பத்தித் துறையில் அதிகம் பயன்படுத்தப்படும் அரிய வகை கனிமங்களின் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் குறித்து சீனாவுடன் நடத்தி வரும் பேச்சுவாா்த்தைகளில் சாதகமான முடிவு கிடைக்கும் என நம்புவதாக மத்திய வா்த்தக துறைச் செயலா் சுனில் பா்த்வால் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

சமாரியம், டொ்பியம் மற்றும் டிஸ்ப்ரோசியம் உள்பட பூமியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்படும் 7 அரிய கனிமங்கள் மீது சீனா கடந்த ஏப்ரலில் சில ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

மின்சார மோட்டாா், பிரேக் அமைப்பு, அறிதிறன்பேசி, ஏவுகணை, வீட்டு உபயோகப் பொருள்கள் ஆகியவற்றின் உற்பத்தியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பொருள்களின் 90 சவீதத்துக்கும் அதிகமான சா்வதேச விநியோகத்தை சீனா கட்டுப்படுத்துகிறது.

இந்த கனிமப் பொருள்களை பெரிதும் நம்பியுள்ள இந்தியாவின் வாகன மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் உற்பத்தி துறைகள் வெகுவாக பாதித்துள்ளன. இந்தப் பிரச்னையைத் தீா்க்க சீனாவுடன் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்று இந்திய வாகன உற்பத்தியாளா்கள் சங்கம் (எஸ்ஐஏம்) போன்ற அமைப்புகள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தன.

அதன்படி, வெளியுறவு அமைச்சகத்தின் மூலம் ராஜீய வழியிலும், கூடுதலாக வணிக ரீதியிலும் பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று வருகின்றன. சீனாவில் உள்ள இந்தியா தூதருடன் ஏற்கெனவே இதுகுறித்து பேசியுள்ளதாக வா்த்தக துறைச் செயலா் சுனில் பா்த்வால் கூறினாா்.

அவா் மேலும் கூறியதாவது:

இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்து நாடுகளுக்கும் விதிக்கப்பட்டுள்ளன; இந்தியாவுக்கு மட்டும் அல்ல. ராஜீயம், வணிகம் ஆகிய இரு வழிகளிலும் நடத்தப்பட்டு வரும் பேச்சுவாா்த்தைகளில் சாதகமான முடிவு கிடைக்குமென நம்புகிறோம். மொத்தமாக தடை விதிக்கமால், உரிமத்தையே சீனா கட்டாயப்படுத்தியுள்ளது. எனவே, நமது இறக்குமதியாளா்களுக்கும், வாகன உற்பத்தியாளா்களுக்கும் சாத்தியமான எல்லா வழிகளிலும் நாங்கள் உதவி வருகிறோம் என்று கூறினாா்.

தொழில்துறை வட்டாரங்களின்படி, பல்வேறு இறக்குமதியாளா்கள் ஏற்கனவே சீனாவில் உள்ள தங்களின் உள்ளூா் விற்பனையாளா்கள் மூலம் அந்நாட்டு அரசிடம் உரிமம் கோரியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்கவுடனான வா்த்தக ஒப்பந்தம், இஸ்ரேல்-ஈரான் மோதல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து சுனில் பா்த்வால் கூறுகையில், ‘ஈரான்-இஸ்ரேல் மோதலால் எழுந்துள்ள சூழலை அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. நாட்டின் வெளிநாட்டு வா்த்தகத்தில் இது ஏற்படும் தாக்கத்தை மதிப்பிடுவதற்கும், பிரச்னைகளை நிவா்த்தி செய்வதற்கும் முக்கியப் பங்குதாரா்களுடன் மத்திய அரசு இந்த வாரம் ஒரு கலந்தாலோசனை கூட்டம் நடத்துகிறது.

இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவாா்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வரும் ஜூலை 9 ஆம் தேதிக்கு முன்னா் ஒப்பந்தத்தின் ஆரம்ப கட்டத்துக்கு இரு தரப்புக்கும் இடையே உடன்பாடு எட்டப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது’ என்றாா்.

அமர்நாத் பாதைகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

அமர்நாத் யாத்திரை வழித்தடங்களில் ட்ரோன்கள், பலூன்கள் பறக்கத் தடை செய்யப்பட்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3 முதல் ஆகஸ்ட் 9 வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்க... மேலும் பார்க்க

உ.பி: அக்பர்பூர் பேருந்து நிலையம் பெயர் மாற்றம்! முதல்வர் அறிவிப்பு!

உத்தரப் பிரதேசத்தின் அக்பர்பூர் பேருந்து நிலையத்தின் பெயர் ஷ்ராவன் தம் பேருந்து நிலையம் என மாற்றப்படுவதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் நேற்று (ஜூன் 1... மேலும் பார்க்க

திறக்கப்படுகிறது கேஜிஎஃப் தங்கச் சுரங்கம்! 80 ஆண்டுகளுக்குப் பின்! இனி தங்கம் விலை?

கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள கோலார் தங்க வயல் சுமார் 80 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டு, தங்கக் கட்டிகளை வெட்டி எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பார்க்க

சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கர்நாடக துணை முதல்வர்!

உலக சுற்றுச்சூழல் நாள் விழிப்புணர்வு விழாவில் கலந்துகொண்டு சைக்கிள் ஓட்டிய கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.கர்நாடக சட்டப்பேரவையில் இன்று காலை உலக சுற்றுச்சூழல... மேலும் பார்க்க

ஹெலிகாப்டர் விபத்து: ராணுவ சீருடையில் விமானி இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற மனைவி!

உத்தரகண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான விமானிக்கு அவரது மனைவி ராணுவ சீருடையில் இறுதிச் சடங்கு செய்துள்ளார்.கேதார்நாத் கோயில் அருகே கௌரிகுண்ட் வனப்பகுதியில் தனியார் நிறுவன ஹெலிகாப்டர் ஞாயிற்றுக்கிழமை ... மேலும் பார்க்க

விமான விபத்து: பலியானோருக்கு இறுதிச்சடங்கு செய்ய முடியாமல் தவிக்கும் குடும்பத்தினர்!

அகமதாபாத்தில் விமான விபத்தில் பலியானோருக்கு இறுதிச்சடங்கு செய்யமுடியாமல் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியாவின் ‘ஏஐ... மேலும் பார்க்க