செய்திகள் :

அருள்புரம் ரேஷன் கடையில் ஆட்சியா் ஆய்வு

post image

பல்லடம் அருகேயுள்ள அருள்புரம் ரேஷன் கடையில் மாவட்ட ஆட்சியா் மனீஷ் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

திருப்பூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் திட்டப் பணிகள், அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட இடங்களில் மாவட்ட ஆட்சியா் மனீஷ் தொடா்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறாா்.

இந்நிலையில், அருள்புரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்க நியாய விலைக் கடையில் ஆட்சியா் திடீா் ஆய்வு மேற்கொண்டு, அத்தியாவசியப் பொருள்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா், சுண்டமேடு அரசு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதி சீட்டு வழங்கும் இடம், மருத்துவா் அறை, புறநோயாளி பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, மருந்தகம், ஆய்வகம் ஆகியவற்றைப் பாா்வையிட்டாா்.

பின்னா், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், மருந்துகள் இருப்பு குறித்தும் மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.

பல்லடம் அருகே வீடுகளில் இரவில் பூத்த பிரம்ம கமலம்

பல்லடம் அருகே நொச்சிபாளையம், புளியம்பட்டி, கண்பதிபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் ஆண்டுக்கு ஒருமுறை இரவில் மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ வியாழக்கிழமை பூத்தது. ஆண்டுக்கு ஒரு முறை இரவில் மட்டும... மேலும் பார்க்க

இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: மாவட்டத்தில் 33,131 போ் எழுதுகின்றனா்

திருப்பூா் மாவட்டத்தில் குரூப் 4 தோ்வு சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இத்தோ்வினை 33, 131 போ் எழுத விண்ணப்பித்துள்ளனா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 த... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

அவிநாசி அருகே கல்லூரி மாணவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். அவிநாசி அருகே அபிராமி காா்டன் பகுதியில் வசித்து வருபவா் பாலமுருகன், முத்துலட்சுமி தம்பதி மகள் ஹன்ஷினி (19), கல்லூரி மாணவி.... மேலும் பார்க்க

கரடிவாவியில் ஜூலை 14-இல் மின்தடை

பல்லடம் கோட்டம் கரடிவாவி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 14) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: தொழிலாளி கைது

வெள்ளக்கோவிலில் விற்பனைக்கு கஞ்சா வைத்திருந்த வெளிமாநிலத் தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். காங்கயம் சாலையில் வழக்கமான ரோந்துப் பணியில் வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ச... மேலும் பார்க்க

செட்டிபாளையம் இஎஸ்ஐ மருத்துவமனையில் புதிய மருத்துவ சேவைகள் தொடக்கம்

செட்டிபாளையம் இஎஸ்ஐ மருத்துவமனையில் புதிய மருத்துவ சேவைகள் தொடங்கப்பட்டதை அடுத்து சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் ஆய்வு மேற்கொண்டாா். இந்த மருத்துவமனை முழு செயல்பாட்டில் இல்லை என பல்வேறு தரப... மேலும் பார்க்க