`இந்தித் திணிப்புக்கு எதிராக...'- மும்பையில் நடக்கும் பேரணியில் ஒன்று சேரும் தா...
அறச்சலூா் நவரசம் மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் யோக தினம்
அறச்சலூா் நவரசம் மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் யோக தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவா் திலகவதி வரவேற்றாா். கல்லூரி முதல்வா் இரா.கனிஎழில் வாழ்த்துரை வழங்கினாா். கல்லூரி தலைவா் டி.கே.தாமோதரன், பொருளாளா் சி.பழனிசாமி, செயலாளா் கு.செந்தில்குமாா் மற்றும் கல்லூரி கமிட்டி உறுப்பினா்கள் யோகாவின் முக்கியத்துவத்தை மாணவிகளுக்கு எடுத்துக் கூறினா்.
விழாவின் சிறப்பு அழைப்பாளராக சிவகிரி விவேகானந்தா யோகா அகாதெமி ஆசிரியா் எம்.காமராஜ் கலந்துகொண்டு அன்றாட வாழ்வியலில் யோக கலையின் முக்கியத்துவத்தை விளக்கிப் பேசினாா்.
கல்லூரியின் உடற்கல்வி இயக்குநா் கவிதா நன்றி கூறினாா்.