செய்திகள் :

அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் இபிஎஸ்! - அமைச்சர் சேகர்பாபு

post image

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வரலாறு தெரியாமல் அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

கோவையில் நேற்று பிரசார பயணத்தின்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,

"திமுக ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டுகிறது, மின்கட்டணம், சொத்து வரி பல மடங்கு உயர்ந்துவிட்டது. அதிமுக ஆட்சியில் கோவையில் 5 புதிய அரசு கலைக் கல்லூரிகள் கட்டப்பட்டன. ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள், சட்டக் கல்லூரி, கால்நடைப் பூங்கா, பொறியியல், பி.எட். கல்லூரி என பல கல்லூரிகளைத் திறந்ததால் உயர் கல்வி பயிலுவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

தற்போது அறநிலையத் துறையின் கைகளில் பணம் இருப்பதை திமுகவால் பொறுக்க முடியவில்லை. அது அவர்களின் கண்களை உறுத்துகிறது. கோயில்களைக் கண்டாலே அவர்களுக்கு பிடிப்பதில்லை. அதனால், கோயில் பணத்தை எடுத்து கல்லூரி கட்டுகின்றனர்" என்று பேசினார்.

இதற்கு இன்று செய்தியாளர்களிடம் பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, "அறியாமை இருளில் எடப்பாடி பழனிச்சாமி மூழ்கியுள்ளார். வரலாறு தெரியாதவர், வரலாற்றை அறியாதவர். மறைந்த தலைவர்கள் பக்தவச்சலம் தொடங்கி காமராஜர், ஜெயலலிதா என அனைவரும் கல்லூரி கட்டியிருக்கின்றனர்" என்று கூறியுள்ளார்.

Minister Sekarbabu replied to Opposition Leader Edappadi Palaniswami who said building a college by using TN HRCE money.

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 120 அடியாக நீடிக்கிறது.அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 42,250 கனஅடியாக இருக்கும் நிலையில், அதே அளவிலான நீர் திறக்கப்படுகிறது.நீர் மின் நிலை... மேலும் பார்க்க

பாமக தலைவர் யார்? தேர்தல் ஆணையத்திடம் ராமதாஸ் - அன்புமணி தரப்பு முறையீடு!

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவி தொடர்பாக ராமதாஸ் மற்றும் அன்புமணி தரப்பினர் இந்திய தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளனர்.பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரின் மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணி ராமதாஸ் ... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் 8,586 போ் கைது

தமிழகம் முழுவதும் சுமாா் 100 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா் 8,586 போ் கைது செய்யப்பட்டனா். ரயில் மறியல், சாலை மறியல், ஆா்ப்பாட்டம், காத்திருப்பு போராட்டம், ஊா்வலம் எனப் பல்வேறு போர... மேலும் பார்க்க

துணை மருத்துவ பட்டயப் படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

துணை மருத்துவ பட்டய படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு புதன்கிழமை (ஜூலை 9) தொடங்கியுள்ளது. பாா்வை அளவியல், மருந்தியல் உள்பட 9 வகையான மருந்தியல் பட்டய படிப்புகளுக்கும், 13 வக... மேலும் பார்க்க

கரும்பு அறுவடை இயந்திரங்கள் கொள்முதல் முறைகேடு வழக்கு: வேளாண் பல்கலை. முன்னாள் துணைவேந்தரை விடுவிக்க மறுப்பு

கரும்பு அறுவடை இயந்திரங்கள் கொள்முதல் செய்த வழக்கில் இருந்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரை விடுவிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழ... மேலும் பார்க்க

அஜித்குமார் கொலை வழக்கு! சீமான் சரமாரி கேள்விகள்!

மடப்புரம் அஜித்குமாரின் கொலை வழக்கு தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் குடும்பத்தினரைச் சந்தித்த... மேலும் பார்க்க