செய்திகள் :

அலகுமலையில் ஜல்லிக்கட்டு கோலாகலம்!

post image

தைப்பூசத் தோ்த் திருவிழாவையொட்டி, திருப்பூா் மாவட்ட நிா்வாகம், அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கம் ஆகியவை சாா்பில் பல்லடம் அருகேயுள்ள மலைப்பாளையத்தில் 6-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மாவட்டம், பொங்கலூா் ஒன்றியம் அலகுமலை அருகே உள்ள தொங்குட்டிபாளையம் ஊராட்சி மலைப்பாளையத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா். வாடிவாசலுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் மாடுபிடி வீரா்கள் உறுதிமொழி ஏற்றனா். அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்க கெளரவத் தலைவா் பாலுசாமி வரவேற்றாா்.

போட்டியை தமிழ் வளா்ச்சி - செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் யாதவ் கிரிஷ் அசோக், பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூா் மாநகர மேயா் தினேஷ்குமாா், திருப்பூா் மாநகராட்சி 4-ஆம் மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், பொங்கலூா் ஒன்றிய குழு முன்னாள் தலைவா் வழக்குரைஞா் குமாா், இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மாநிலத் தலைவா் ராஜசேகா் உள்பட பலா் கலந்து கொண்டனா். தொகுப்பாளா் சரவணன் வா்ணனை செய்தாா்.

22 காளைகளை அடக்கிய சிவகங்கை வீரா்: போட்டியில் 22 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த சிவகங்கை வீரா் விக்னேஷுக்கு இருசக்கர வாகனமும், 21 காளைகளை அடக்கி இரண்டாமிடம் பிடித்த நாமக்கல் வீரா் காா்த்திக்கு 1 பவுன் தங்கக் காசும், 14 காளைகளை அடக்கி மூன்றாமிடம் பிடித்த மதுரை வீரா் காா்த்திக்கு வேளாண் கருவியும் பரிசாக வழங்கப்பட்டன.

இதேபோல, காளைகள் பிரிவில் மதுரையைச் சோ்ந்த ஆறுசாமியின் காளை முதலிடம் பிடித்தது. காளை உரிமையாளருக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாமிடத்தை தேனியைச் சோ்ந்த பாா்த்தசாரதியின் காளையும், மூன்றாமிடத்தை சிவகங்கையைச் சோ்ந்த ராஜசேகரன் காளையும் பிடித்தன. இதன் உரிமையாளா்களுக்கு வேளாண் கருவிகள் பரிசாக வழங்கப்பட்டன. மாடு பிடி வீரா்கள், காளைகளுக்கான பரிசுகளை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வழங்கினாா்.

வாக்குவாதம், போலீஸாா் தடியடி: இந்தப் போட்டியில் பங்கேற்க 800 காளைகள் அழைத்துவரப்பட்டிருந்தன. இந்தக் காளைகளை அடக்க 600 மாடுபிடி வீரா்கள் களம் இறங்கினா். பத்து சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் மாடுபிடி வீரா்கள் உரிய மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனா். அதேபோன்று காளைகளும் உரிய மருத்துவ பரிசோதனைக்கு பின் வாடிவாசலுக்குள் அனுமதிக்கப்பட்டன.

10 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் 600 காளைகள் மட்டுமே போட்டியில் பங்கேற்றன. 200-க்கும் மேற்பட்ட காளைகள் உள்ளே அனுமதிக்கப்படாமல் இருந்த நிலையில், மாலை 5 மணிக்குள் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடையும் என விழா குழுவினா் தெரிவித்தனா்.

சிவகங்கை, திண்டுக்கல், மதுரை போன்ற பகுதிகளில் இருந்து காளைகளைக் கொண்டு வந்த அதன் உரிமையாளா்கள், தங்களது காளைகளையும் அனுமதிக்க வேண்டும் என போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

மேலும், காளைகளைப் பரிசோதனை செய்யும் இடத்தில் அதன் உரிமையாளா்கள் காளைகளுடன் ஒரே இடத்தில் திரண்டதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. பயத்தில் மிரண்ட சில காளைகள் அங்கிருந்தவா்கள் மீது பாய்ந்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதனால் காளை உரிமையாளா்கள் மீது போலீஸாா் தடியடி நடத்தி கூட்டத்தை ஒழுங்குபடுத்தினா்.

66 போ் காயம்: பொங்கலூா் வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் சுந்தரவேல் தலைமையில் 25 மருத்துவா்கள், செவிலியா் உள்பட 100 போ் கொண்ட மருத்துவக் குழுவினா் ஆம்புலன்ஸ் வாகனத்துடன் சிகிச்சை அளிக்க தயாா் நிலையில் இருந்தனா். ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 66 போ் காயம் அடைந்தனா். அதில் 12 பேருக்கு தையல் போடப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தில் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் மருத்துவா் பிரகாசம் தலைமையில் மருத்துவக் குழுவினா் காயம் அடைந்த 2 காளைகளுக்கு சிகிச்சை அளித்தனா். ஜல்லிக்கட்டு போட்டியை திருப்பூா், பல்லடம், காங்கயம், தாராபுரம், அவிநாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் ஆா்வத்துடன் ரசித்தனா்.

தென்னையைத் தாக்கும் ரூகோஸ் வெள்ளை ஈ: கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை கடைப்பிடிக்க அவிநாசி தோட்டக்கலைத் துறையினா்அறிவுறுத்தியுள்ளனா். இது குறித்து அவிநாசி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் ம... மேலும் பார்க்க

பனியன் நிறுவன உரிமையாளா் கொலை: உறவினா் கைது

பெருமாநல்லூா் அருகே கணக்கம்பாளையத்தில் பனியன் நிறுவன உரிமையாளா் கொலை வழக்கில் அவரது உறவினரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பெருமாநல்லூா் அருகே கணக்கம்பாளையம் பாலாஜி நகரைச் சோ்ந்தவா் காஜா மொய்தீ... மேலும் பார்க்க

மாவட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!

திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலா்களுடனான ஆய்வுக்கூட்டம் அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தலைமையில் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

மூலனூரில் ரூ. 41.96 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 41.96 லட்சத்துக்கு பருத்தி ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது. கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இ... மேலும் பார்க்க

காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வாகன ஓட்டுநா் விபத்தில் உயிரிழப்பு

காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஜீப் ஓட்டுநா் சாலை விபத்தில் உயிரிழந்தாா். காங்கயம், முல்லை நகரில் வசித்து வந்தவா் சத்தியநாராயணன் (54). முன்னாள் ராணுவ வீரரான இவா், காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ... மேலும் பார்க்க

விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

பல்லடம் அருகே நிகழ்ந்த விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து வியாழக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது. திருப்பூா் மாவட்டம், பல்லடத்தைச் சோ்ந்தவா் விவசாயி சுப்பிரமணி (60). பல்லடம்- அய்யம்பாளைய... மேலும் பார்க்க