செய்திகள் :

அலுவலகத்தில் காபி அருந்துபவரா நீங்கள்? இருதய நோய் அபாயம் அதிகம்!

post image

அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் இயந்திரங்களின் மூலம் வழங்கப்படும் காபியால் இருதய நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அலுவலகங்களில் இயந்திரங்களின் மூலம் வழங்கப்படும் காபி குறித்து சால்மர்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைந்து உப்சாலா பல்கலைக்கழகம் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுக்கு, 14 வெவ்வேறு பன்னாட்டு நிறுவன அலுவலகங்களில் உள்ள காபி இயந்திரங்கள் உள்படுத்தப்பட்டன.

இந்த ஆய்வின் மூலம், அலுவலக இயந்திரங்களில் வழங்கப்படும் காஃபியில் கொழுப்புகள் இருப்பது தெரிய வந்தது. சாதாரண ஃபில்டர் காபிகளுடன் ஒப்பிடும்போது, இயந்திரங்களிலிருந்து வரும் காஃபியில் கொழுப்பை அதிகரிக்கும் பொருள்களின் அளவு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த கொழுப்புகளால் இருதய நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பெரும்பாலான காபி இயந்திரங்கள் கொழுப்பு சேர்மங்களை திறம்பட வடிகட்டுவதில்லை. பொதுவாக, அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் காணப்படும் வழக்கமான காபி இயந்திரங்கள், இந்த கொழுப்பை அதிகரிக்கும் பொருள்களை எவ்வளவு திறம்பட வடிகட்டுகின்றன என்பது குறித்து ஆராய்ச்சி செய்யப்படவில்லை.

ஆனால், காகித வடிகட்டிகளைப் பயன்படுத்தும் வழக்கமான ஃபில்டர் காபி தயாரிப்பாளர்கள், இந்த கொழுப்பு சேர்மங்களில் பெரும்பாலானவற்றை அகற்றி விடுவர்.

இதனால், தினசரி அதிகளவிலான காபி அருந்துவோர்கள், காகித வடிப்பான்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் நன்கு வடிகட்டப்பட்ட காபியைத் தேர்வு செய்ய ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்தனர்.

இதையும் படிக்க:உலகின் மூன்றாவது பொருளாதாரமாக இந்தியா! சர்வதேச நிதி நாணயம் தகவல்

தனியாா் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த சட்டம்: காங்கிரஸ் வலியுறுத்தல்

புது தில்லி: ‘தனியாா் மற்றும் சிறுபான்மை அல்லாத கல்வி நிறுவனங்களில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும்’ என மத்திய அரசை காங்கிரஸ் ... மேலும் பார்க்க

மின் வாகன உற்பத்தி: 2030-இல் இந்தியா முதன்மை நாடாகும்: நிதின் கட்கரி

தாணே: ‘2030-இல் மின்சார வாகன உற்பத்தியில் உலகின் மிகப்பெரும் நாடாக இந்தியா உருவெடுக்கும்’ என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி திங்கள்கிழமை தெரிவித்தாா். மேலும்... மேலும் பார்க்க

இந்தியாவின் வெளிநாட்டு கடன் 71,790 கோடி டாலராக அதிகரிப்பு

புது தில்லி: இந்தியாவின் மொத்த வெளிநாட்டு கடன் கடந்த ஆண்டு இறுதியில் 71,790 கோடி டாலராக அதிகரித்துள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு, டிசம்பரில் 64,870 கோடி டாலராக இருந்த நாட்டின் அந்நிய கடன் ஒரே ஆண்டில் 10 ... மேலும் பார்க்க

கன்னித்தன்மை பரிசோதனைக்கு கட்டாயப்படுத்துவது சட்டவிரோதம்: சத்தீஸ்கா் உயா்நீதிமன்றம்

பிலாஸ்பூா்: கன்னித்தன்மை பரிசோதனை மேற்கொள்ள பெண்களைக் கட்டாயப்படுத்துவது அரசமைப்புச் சட்டப் பிரிவு 21-ஐ மீறுவதாகும் என்று சத்தீஸ்கா் உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக அந்த உயா்நீதிமன்றத்தில்... மேலும் பார்க்க

வேட்டையாடப்படும் இந்தியக் கல்வி முறை: மத்திய அரசு மீது சோனியா விமா்சனம்

புது தில்லி: பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசின் கல்விக் கொள்கையை நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவா் சோனியா காந்தி கடுமையாக விமா்சித்துள்ளாா். ‘மத்தியில் அதிகார குவிப்பு, வணிகமயமாக்கல், வகுப்புவாதமயமா... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்த மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு தயாா்: கிரண் ரிஜிஜு

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய தயாா் நிலையில் மத்திய அரசு உள்ளதாக மத்திய சிறுபான்மை விவகாரங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு திங்கள்கிழமை தெர... மேலும் பார்க்க