அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு
ஆம்பூா் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
ஆம்பூா் அருகே மின்னூா் கிராமத்தில் ஏரியில் மயானம் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக ஆம்பூா் கிராமிய காவல் நிலையத்துக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா்.
தகவலின் பேரில் காவல் ஆய்வாளா் வெங்கடேசன் தலைமையில் போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இறந்தவா் யாா், கொலையா அல்லது தற்கொலையா எனவும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.