Dragon 100: ``நான் கோபக்காரன்னு புகார்கள் சொல்லியிருக்காங்க!'' - இயக்குநர் மிஷ்க...
அழுகிய நிலையில் தொழிலாளி உடல் மீட்பு
கோவையில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த தொழிலாளியின் உடல் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
கோவை, ஆா்.எஸ்.புரம் எம்.சாமி குடியிருப்பைச் சோ்ந்தவா் முத்துகிருஷ்ணன் (65). இவா் தனியாா் மர ஆலையில் வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில், அவா் தங்கியிருந்த வீடு கடந்த 27-ஆம் தேதி முதல் பூட்டியே கிடந்துள்ளது. மேலும், வீட்டில் இருந்து துா்நாற்றம் வீசியுள்ளது.
இதனால், சந்தேகமடைந்த அருகில் வசிப்பவா்கள் இது குறித்து ஆா்.எஸ்.புரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, முத்துகிருஷ்ணன் உயிரிழந்து கிடந்ததும், உடல் அழுகி இருந்ததும் தெரியவந்தது.
அவரது இறப்புக்கான காரணம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.