செய்திகள் :

அவசரமாகத் தரையிறங்கிய இண்டிகோ விமானம்! ஏன்?

post image

பாட்னாவில் இருந்து தில்லிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம் ஒன்று பறவை மோதியதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

பிகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஜெய்பிரகாஷ் நாராயணன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 169 பயணிகளுடன் இன்று காலை 8.42 மணிக்கு இண்டிகோ விமானம்(6E509) ஒன்று தில்லிக்கு புறப்பட்டது.

புறப்பட்ட சில நொடிகளில் விமானத்தின் மீது பறவை மோதியதால் விமானம் மீண்டும் பாட்னா விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. விமானத்தை சரிசெய்யும் பணிகள் நடந்து கொண்டிருப்பதாக விமான நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"விமானத்தில் ஏற்பட்ட அதிர்வு காரணமாக விமானத்தைத் தரையிறக்க விமானியிடமிருந்து கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு தகவல் வந்தது. அதன்படி விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர். பயணிகளை அனுப்ப வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு தேவையான வசதிகளும் செய்து தரப்படுகின்றன. பயணிகளின் சிரமத்திற்கு வருந்துகிறோம். எங்கள் பயணிகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. விமானத்தின் நிலை குறித்து பணியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்" என்று பாட்னா விமான நிலையம் கூறியுள்ளது.

A Delhi-bound IndiGo flight from Patna, with 169 passengers on board, had to make an emergency landing after a bird hit.

குஜராத்: பாலம் இடிந்து விழுந்ததில் 15 ஆக உயர்ந்த பலி!

குஜராத்தின் வதோதராவில் 40 ஆண்டுகள் பழைமையான பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக வதோதரா மாவட்ட ஆட்சியர் அனில் தமேலியா கூறுகையில், இந்த நிலையில்,... மேலும் பார்க்க

அவசரநிலை, இந்திரா காந்தியை விமர்சித்த சசி தரூர்!

அவசரநிலை காலம், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் வெளிப்படையாக விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் திருவனந்தபுரம் மக... மேலும் பார்க்க

மனைவி மீது சந்தேகம்! குழந்தைக்கு டிஎன்ஏ சோதனைக்கு உத்தரவிட முடியாது

மும்பை: கணவருக்கு, தன்னுடைய மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக, குழந்தைக்கு டிஎன்ஏ சோதனை செய்ய அனுமதிக்க முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை உத்தரவிட்டுள்ளது.மேலும், விதிவிலக்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் கனமழைக்கு 11 பேர் பலி!

பாகிஸ்தானின் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழைக்கு இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தின் லாகூர், பஞ்சாப் மாகாணத்தில் சுற்றியுள்ள மாவட்டங்கள், பலுசிஸ்தானின் சில பகு... மேலும் பார்க்க

ராணா, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்பட 29 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு!

நடிகர்கள் ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்பட 29 பிரபலங்களுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.தெலங்கானாவின் மியாபூர் நகரைச் சேர்ந்த தொழிலதிபர் பி.எம்.பனீந்த்ரா சர்மா, ச... மேலும் பார்க்க

ஆதார் அட்டையை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம்

புது தில்லி: இந்தியாவில், ஆதார் அட்டையை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில், இந்திய தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.நாட்டின் குடியுரிமை ஆவணம் தொடர்பான வழக்கு உச்ச... மேலும் பார்க்க