செய்திகள் :

அஸ்ஸாம் முதல்வரை மக்கள் சிறைக்கு அனுப்புவா்: ராகுல் காந்தி

post image

ஊழலில் ஈடுபடும் அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மாவை மக்கள் சிறைக்கு அனுப்புவா் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்தாா்.

காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ராகுல் காந்தி ஆகியோா் ஒருநாள் பயணமாக புதன்கிழமை அஸ்ஸாம் சென்றனா். அந்த மாநிலத்தின் குவாஹாட்டி நகரில் அஸ்ஸாம் காங்கிரஸை வலுப்படுத்துவது குறித்து கட்சி எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா்கள் உள்ளிட்டோருடன் இருவரும் விவாதம் மேற்கொண்டனா்.

அந்த மாநிலத்தின் சய்கான் பகுதியில் நடைபெற்ற மற்றொரு கட்சி கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், ‘அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா தன்னை மன்னா் என்று கருதுகிறாா். ஆனால் அவா் செய்யும் ஊழலுக்கு மக்கள் அவரை சிறைக்கு அனுப்புவா். ஊழலுக்கு அவரும், அவரின் குடும்பத்தினரும் பொறுப்பாக்கப்படுவா்.

தோ்தல் ஆணையமும் பாஜகவும் ஒன்றிணைந்து பணியாற்றுகின்றன. கடந்த ஆண்டு வாக்காளா் பட்டியல் திருத்தம் மூலம், மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தலில் மோசடி செய்து பாஜக வெற்றிபெற்றது. இதே தந்திரத்தை பிகாரில் அக்கட்சி செய்ய முயற்சிப்பதுடன், அஸ்ஸாமிலும் செய்யும். அடுத்த ஆண்டு நடைபெறும் அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றிபெறும்.

ஆா்எஸ்ஸின் வெறுப்புணா்வு மற்றும் வன்முறை, காங்கிரஸின் உண்மை மற்றும் அகிம்சை ஆகிய இரு சித்தாந்தங்களுக்கு இடையே நாட்டில் சண்டை நடைபெற்று வருகிறது.

திருமணங்களுக்குப் பெருமளவு செலவழிக்கும் பெரும் கோடீஸ்வரா்கள் ஒருபுறம், வரி மற்றும் விலைவாசி உயா்வை சுமக்கும் சாமானியா்கள் மறுபுறம் என தற்போது 2 இந்தியாக்கள் உள்ளன என்றாா்.

மும்பை பன்னாட்டு விமானம் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகர் மும்பையிலுள்ள பன்னாட்டு விமான நிலையம் மற்றும் மும்பை - அகமதாபாத் விமானம் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. மும்பையிலுள்ள சத்ரபதி சிவாஜி மஹாராஜ் பன... மேலும் பார்க்க

தில்லியில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்!

தில்லியில் இருந்து இம்பாலுக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தில்லியில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. தலைநகர் தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ... மேலும் பார்க்க

கேரளத்தில் கனமழையால் நிலச்சரிவு! 3 நாள்களுக்கு ரெட் அலர்ட்!

கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி பல்வேறு இடங்களில் வெள்ளம் மற்றும் சிறிய அளவிலான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கேரளத்தில் பருவமழை த... மேலும் பார்க்க

தலைமைத் தேர்தல் ஆணையருடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு!

தில்லியில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை திமுக எம்.பி.க்கள் இன்று(வியாழக்கிழமை) சந்தித்துப் பேசியுள்ளனர். தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து வாக்காளர் பட்... மேலும் பார்க்க

ஆடி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆடி மாதப் பூஜைக்காக இன்று (வியாழக்கிழமை) முதல் ஜூலை 21 வரை 5 நாள்கள் கோயிலின் நடை திறந்திருக்கும். கேரளத்தில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயில் ஒவ்வொரு தமிழ் மாதமும் 5 நாள்கள் கோ... மேலும் பார்க்க

அன்று நீட் தோல்வி.. இன்று ரோல்ஸ் ராய்ஸியில் ரூ.72 லட்சத்தில் வேலை! 20 வயதில் சாதித்த பெண்

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 20 வயதே ஆன ரிதுபர்னா என்ற பொறியியல் மாணவி, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.72 லட்சத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.எந்தத் தோல்வியும் முடிவல்ல, வாய்ப்புகள் கொட்டிக்கிட... மேலும் பார்க்க