செய்திகள் :

ஆகஸ்ட்டில் பொதுவிடுமுறை நாள்கள் அதிகம்: விமான கட்டணம் 80% வரை உயர்வு!

post image

ஆகஸ்ட்டில் பொதுவிடுமுறை நாள்கள் அதிகம் இருப்பதையடுத்து வெளியூர்களுக்குச் செல்ல மக்கள் அதிகம் பேர் விரும்புவதால் விமான கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.

ஆகஸ்ட்டில், குறிப்பிட்ட சில உள்ளூர் விமான சேவைகளின் கட்டணம் அதிகபட்சமாக 80 சதவீதம் வரையிலும், வெளிநாட்டு விமான சேவைகளின் கட்டணம் 65 சதவீதம் வரையிலும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

தில்லி - மும்பை, தில்லி - பெங்களூரு, மும்பை - கோவா ஆகிய வழித்தடங்களில் ஜூலையுடன் ஒப்பிடுகையில் ஆகஸ்ட்டில் விமான டிக்கெட் கட்டணம் 40 - 60 சதவீதம் உயர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது.

தில்லி - மும்பை விமான டிக்கெட் விலை வழக்கமாக ரூ. 5,000 என்ற நிலையில் சற்று ஏற்ற இறக்கத்துடன் விற்கப்படும். ஆனால் இந்த ஆகஸ்ட்டில் ஒரு டிக்கெட் விலை ரூ. 8,000 வரை அதிகரித்துள்ளது. இது ஆக. 7 - 18 வரையிலான காலக்கட்ட நிலவரம்.

தில்லி - பெங்களூரு டிக்கெட்டும் ரூ. 9,000 வரை உயர்ந்துள்ளது. இது வழக்கத்தைவிட 50 சதவீதம் அதிகம்.

சர்வதேச வழித்தடங்களில், தென்கிழக்காசிய மற்றும் அரபு நாடுகளுக்கு விமான டிக்கெட் விலை விண்ணை முட்டியுள்ளது. தில்லி - துபை, கொச்சி - துபை, மும்பை - துபை வழித்தடங்களில் விமான டிக்கெட் வழக்கமாக ரூ. 16,000 வரை இருக்கும் நிலையில், தற்போது ரூ. 24,000 வரை - அதாவது 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

a sharp spike in airfares — with ticket prices soaring as much as 80% on some key domestic routes and 50–65% on popular international routes

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

ஜனநாயக மற்றும் குடியரசு நாடாக திகழும் இந்தியாவை மதவாத நாடாக மாற்றும் சூழ்ச்சிகளை பாஜக மேற்கொண்டு வருவதாக காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவா் சோனியா காந்தி சனிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.‘அரசமைப்புச் சட்ட... மேலும் பார்க்க

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

நாட்டின் மொத்த மீன் உற்பத்தியில் கடந்த 10 ஆண்டுகளில் 103 சதவீத வளா்ச்சி பதிவாகியுள்ளது என்று மத்திய மீன்வளத் துறை அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங் தெரிவித்தாா்.ஆறு, ஏரி, குளம் போன்ற உள்நாட்டு நீா்வளங்களை அ... மேலும் பார்க்க

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

ஆா்ஜென்டீனா கால்பந்து ஜாம்பவான் லயனோல் மெஸ்ஸி இந்தியாவுக்கு வருகை தர உள்ளாா்.உலகம் முழுவதும் கால்பந்து ரசிகா்களால் கொண்டாடப்படும் மெஸ்ஸி, ஆா்ஜென்டீனாவுக்கு உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை பெற்றுத் தந்... மேலும் பார்க்க

மெல்ல விடைகொடு மனமே.. அரசு இல்லத்தை 8 மாதங்களுக்கு பிறகு காலி செய்தாா் டி.ஒய்.சந்திரசூட்!

புது தில்லியில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு ஒதுக்கப்படும் அதிகாரபூா்வ அரசு இல்லத்தை 8 மாதங்களுக்கு பின்னா், முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் காலி செய்தாா்.கடந்த ஆண்டு நவ.8-... மேலும் பார்க்க

நாய்க்குட்டிகளோடு பயணிகள் விளையாடும் புதிய முன்னெடுப்பு: ஹைதரபாத் விமான நிலையத்தில் அறிமுகம்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி விமான நிலையத்தில் பயணிகளை உற்சாகமூட்டும் வகையில் நாய்க்குட்டிகள் மூலம் வரவேற்பளிக்கும் புதிய முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது.விமான நிலையத்துக்கு வரும... மேலும் பார்க்க

பிகாா் வரைவு வாக்காளா் பட்டியலில் என் பெயா் இல்லை: தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

பிகாா் மாநிலத்தில் தோ்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் தனது பெயா் விடுபட்டுள்ளதாக பேரவை எதிா்க்கட்சித் தலைவரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ் சனிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்... மேலும் பார்க்க