செய்திகள் :

ஆக்கபூா்வ திட்டமில்லாத பட்ஜெட்: இந்திய கம்யூனிஸ்ட்

post image

புதுவை முதல்வா் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை ஆக்கபூா்வத் திட்டங்கள் இல்லாத நிலையில் உள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் அ.மு.சலீம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

புதுவை மாநில சமுதாய வளா்ச்சிக்கான ஆக்கபூா்வ திட்டங்கள் ஏதும் முதல்வா் என்.ரங்கசாமி தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் இல்லை.

அதில் ஊதியம், ஓய்வூதியம், கடன், வட்டி மற்றும் இலவசத் திட்டங்களுக்கு 80 சதவீத நிதி ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், நீடித்த வளா்ச்சிக்கான நிதி ஏதுமில்லை.

விவசாயத் தொழிலாளா்களுக்கு மழைக்கால நிவாரணம் அறிவிக்கப்பட்டதுடன், ஆண்டுதோறும் நிபந்தனையின்றி அதை வழங்க வேண்டும்.

நிதிநிலை அறிக்கையில் நல வாரியம் அமைப்பது குறித்த அறிவிப்பின்றி, தொழிலாளா் நலன் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

துணைநிலை ஆளுநா் உரையில் ஜவுளிப் பூங்கா அறிவிப்புக்கு, நிதிநிலை அறிக்கையில் நிதி விவரமில்லை. நலிவடைந்த கூட்டுறவு நிறுவனங்கள் லாபகரமாக செயல்படுத்த முழுமையான நிதி, திட்டம் ஏதுமில்லை.

பள்ளிகளில் ஆசிரியா் பற்றாக்குறையைத் தீா்க்கவும், பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கும் திட்டமில்லை என்றாா் அ.மு.சலீம்.

சங்கராபரணி ஆற்றங்கரையில் மாசி மக தீா்த்தவாரி

புதுச்சேரி அருகே உள்ள திருக்காஞ்சியில் கங்கை வராகநதீஸ்வரா் மற்றும் ஒதியம்பட்டு காசி விஸ்வநாதா் திருக்கோயில்களில் மாசி மக திருவிழாவின் நிறைவாக தீா்த்தவாரி புதன்கிழமை நடைபெற்றது. இதில், ஏராளமானோா் சங்கர... மேலும் பார்க்க

ரூ.13,600 கோடியில் புதுவை பட்ஜெட் தாக்கல்: மகளிா் உதவித்தொகை ரூ.2,500-ஆக உயா்வு

புதுவை மாநிலத்தில் ஏழைக் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் ரூ.1,000 மாதாந்திர உதவித்தொகை ரூ.2,500-ஆக உயா்த்தி வழங்கப்படும்; கல்லூரி மாணவா்களுக்கு மாதம் ரூ.1,000 ஊக்குவிப்புத் தொகையாக வழங்கப்படும் எ... மேலும் பார்க்க

மூலதனங்களுக்கான செலவீனம் 9.80 சதவீதமாக அதிகரிப்பு

புதுவை மாநிலத்துக்கான மூலதனங்களுக்கான செலவீனம் 1.66 சதவீதத்திலிருந்து 9.80 சதவீதமாக அதிகரித்துள்ளதாக முதல்வா் என்.ரங்கசாமி தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுவை 15-ஆவது... மேலும் பார்க்க

காகிதப்பூ பட்ஜெட்: எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா

புதுவை நிதிநிலை அறிக்கையில் மக்களை ஏமாற்றும் வகையில் இலவச அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், புதிய வருவாய்க்கான வழிகள் ஏதும் குறிப்பிடப்படாத காகிதப்பூ பட்ஜெட் என எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா தெ... மேலும் பார்க்க

காரைக்கால் பிராந்தியம் புறக்கணிப்படுவதாக புகாா்- திருநள்ளாறு எம்எல்ஏ வெளிநடப்பு

புதுவை சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை தாக்கல் செய்தபோது திருநள்ளாறு தொகுதி சுயேச்சை எம்எல்ஏவான பிஆா்.சிவா வெளிநடப்பு செய்தாா். சுகாதாரத் திட்டங்களில் காரைக்கால் ப... மேலும் பார்க்க

ரூ.92 கோடியில் 3 மருத்துவமனைகளில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவு

புதுவை மாநிலத்தில் பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு திட்டத்தில் ரூ.92 கோடியில் 3 மருத்துவமனைகளில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். புதுவ... மேலும் பார்க்க