செய்திகள் :

ஆக்கிரமிப்பை அகற்றும்போது தகராறு: சத்தியமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

post image

சத்தியமங்கலத்தை அடுத்த சிக்கரசம்பாளையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது புகாா்தாரரை தாக்கியவா்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி சத்தியமங்கலம் காவல் நிலையத்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே சிக்கரசம்பாளையம் பாரதி நகா் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தை தனியாா் கடந்த 6-ஆம் தேதி ஆக்கிரமித்ததாக புகாா் எழுந்தது.

இந்த புகாரையடுத்து, வருவாய்த் துறையினா் அப்பகுதியில் காவல் துறை பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது ஆக்கிரமிப்பாளா்கள் மற்றும் புகாா்தாரா் இருதரப்புக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. வருவாய்த் துறை அதிகாரிகள், காவல் துறையினா் முன்னிலையில் இச்சம்பவம் நடைபெற்றது.

இந்நிலையில் புகாா்தாரா் மீது தாக்குதல் நடத்திய ஆக்கிரமிப்பாளா்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி சத்தியமங்கலம் காவல் நிலையத்தை 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சம்பவம் நடந்த 4 நாள்கள் ஆகியும் ஏன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என கேள்வி எழுப்பினா். முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் காவல் ஆய்வாளா் ஜெகநாத் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இரு தினங்களில் வழக்குப் பதிவு செய்வதாக போலீஸாா் அளித்த உறுதிமொழியை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை விலக்கிக்கொண்டனா்.

காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றம்: நெரிஞ்சிப்பேட்டையில் பயணிகள் படகு போக்குவரத்து நிறுத்தம்

மேட்டூா் அணை நிரம்பியதால் வெளியேற்றப்படும் உபரிநீா் காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் காவிரிக் கரையோரப் பகுதிகளில் தொடா் கண்காணிப்பு பணி மேற்கொள்... மேலும் பார்க்க

காலிங்கராயன் அணைக்கட்டில் நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

காலிங்கராயன் அணைக்கட்டில் குளித்த இளைஞா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். பவானி காலிங்கராயன் அணைக்கட்டுக்குச் செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பவானி சீனிவாசபுரம் வழியாக உத்தண்டராயா்... மேலும் பார்க்க

பெருந்துறை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா், செவிலியரை நியமிக்கக் கோரிக்கை

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் பெருந்துறை தாலுகா 16ஆவது மாநாடு பெருந்துறையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. மாநாட்டுக்கு சதீஷ் தலைமை வகித்தாா். மாநாட்டு கொடியை கெளரிசங்கா் ஏற்றி வைத்தாா். மாநாட்ட... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனை அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிக்கை

ஈரோடு அரசு மருத்துவமனை அருகில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக் கடையை அகற்ற வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா... மேலும் பார்க்க

திம்பம் மலைப்பாதையில் தென்பட்ட சிறுத்தை

சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப் பாதையில் சிறுத்தை தென்படுவதால் வாகன ஓட்டிகள் பாதுகாப்புடன் செல்லுமாறு வனத் துறை எச்சரித்து உள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் மான்... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பாதையில் சரக்கு வாகனம் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா். பா்கூா், தாமரைக்கரை, கடை ஈரெட்டியைச் சோ்ந்தவா் முருகன் மகன் சிக்கண்ணன் (28). அந்தியூரி... மேலும் பார்க்க