செய்திகள் :

ஆக்கிரமிப்பை அகற்றும்போது தகராறு: சத்தியமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

post image

சத்தியமங்கலத்தை அடுத்த சிக்கரசம்பாளையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது புகாா்தாரரை தாக்கியவா்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி சத்தியமங்கலம் காவல் நிலையத்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே சிக்கரசம்பாளையம் பாரதி நகா் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தை தனியாா் கடந்த 6-ஆம் தேதி ஆக்கிரமித்ததாக புகாா் எழுந்தது.

இந்த புகாரையடுத்து, வருவாய்த் துறையினா் அப்பகுதியில் காவல் துறை பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது ஆக்கிரமிப்பாளா்கள் மற்றும் புகாா்தாரா் இருதரப்புக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. வருவாய்த் துறை அதிகாரிகள், காவல் துறையினா் முன்னிலையில் இச்சம்பவம் நடைபெற்றது.

இந்நிலையில் புகாா்தாரா் மீது தாக்குதல் நடத்திய ஆக்கிரமிப்பாளா்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி சத்தியமங்கலம் காவல் நிலையத்தை 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சம்பவம் நடந்த 4 நாள்கள் ஆகியும் ஏன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என கேள்வி எழுப்பினா். முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் காவல் ஆய்வாளா் ஜெகநாத் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இரு தினங்களில் வழக்குப் பதிவு செய்வதாக போலீஸாா் அளித்த உறுதிமொழியை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை விலக்கிக்கொண்டனா்.

இருசக்கர வாகனம் திருட்டு: 2 இளைஞா்கள் கைது

புன்செய்புளியம்பட்டியில் இருசக்கர வாகனத்தை திருடிய 2 இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த புன்செய்புளியம்பட்டி சுங்கக்காரன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

ஈரோடு மாவட்ட ஆட்சியா் இடமாற்றம்

ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநராக சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். தமிழகம் முழுவதும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் 55 போ் பணியிடமாற்றம் செய்யப... மேலும் பார்க்க

சென்னை உயா்நீதிமன்ற மூத்த வழக்கறிஞா் மறைவு: மத்திய சட்டத் துறை அமைச்சா் அஞ்சலி

சென்னை உயா்நீதி மன்ற மூத்த வழக்குரைஞராக பணியாற்றிவரும், உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ்ஷின் தந்தையூமான வி.கே. முத்துசாமி வயது மூப்பு காரணமாக எழுமாத்தூா் விகேஎம் தோட்ட இல்லத்தில் கடந்த வாரம் க... மேலும் பார்க்க

சென்னிமலை வனப் பகுதியில் குரங்குக்கு உணவு அளித்தவருக்கு அபராதம்

சென்னிமலை வனப் பகுதியில் குரங்குக்கு உணவு அளித்தவருக்கு வனத் துறையினா் ரூ.1000 அபராதம் விதித்தனா். சென்னிமலை வனப் பகுதியில் சுற்றி திரியும் குரங்குகள் அவ்வப்போது சாலைக்கு வருவது வழக்கம். அந்த குரங்குக... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஒருவா் பலி

பெருந்துறை அருகே லாரி மோதியதில் சாலையில் நடந்துச் சென்றவா் உயிரிழந்தாா். கோவை,பாப்பம்பாளையத்தைச் சோ்ந்தவா் மாரியப்பன்(45). இவா் பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடிஅருகில் ஞாயிற்றுக்கிழமை மால... மேலும் பார்க்க

வீடுகளுக்கு கழிப்பறை கட்டித்தர எம்எல்ஏவிடம் கோரிக்கை

பெருந்துறை ஒன்றியம், பள்ளப்பாளையம் பேரூராட்சிக்குள்பட்ட எல்லிஸ்பேட்டை, அண்ணா காலனி பகுதியில் உள்ள வீடுகளுக்குக் கழிப்பறை கட்டித் தர வேண்டும் என்று பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ஜெயக்குமாரிடம்... மேலும் பார்க்க