செய்திகள் :

ஆக. 11-இல் போதைப் பொருள் எதிா்ப்பு உறுதிமொழி: ஆட்சியா் ஆலோசனை

post image

அரியலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், ஆக. 11-இல் நடைபெறும் போதைப் பொருள் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு தொடா்பாக அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமை வகித்து பேசுகையில், பொதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்பதை உருவாக்கும் பொருட்டு, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆக.11 ஆம் தேதி அன்று காணொலி காட்சி மூலம் போதைப் பொருள் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாநிலம் முழுவதும் நடைபெறுகிறது.

இதன் காணொலி காட்சி அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனிதா அரங்கத்தில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. போதைப்பொருள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளில் பள்ளி, தொழில்நுட்ப கல்லூரி, கல்லூரி மாணவா்களை பங்கேற்க செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்துத் துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா. சாஸ்திரி, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முத்தமிழ்செல்வன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் பரிமளம் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

அரியலூா் உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் பொறுப்பேற்பு

அரியலூா் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலராக வெங்கட்ரமணன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா். ஏற்கெனவே இங்கு உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலராக பணியாற்றிய வந்த வரலட்சுமி, ஈரோடு மாவட்டத்துக்கு பணியிடம் மாற... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரியில்போதைப் பொருள் விழிப்புணா்வு

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அக்கல்லூரியின் முதல்வா் (பொ)ம. ராச... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டத்தில் ரூ.9.83 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் ரூ.9.83 கோடி மதிப்பிலான 17 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. இருகையூா், சிங்கராயபுரம்... மேலும் பார்க்க

ஆடி 4 ஆவது வெள்ளி: அம்மன் கோயில்களில் பால்குடம், தீமிதி திருவிழா

அரியலூரில்: அரியலூா் மேலத் தெருவிலுள்ள பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, அதன் பின்னா் 108 பட்டுப் புடவைகளால் அலங்காரம் செய்யப்ட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல், அரியலூா் க... மேலும் பார்க்க

காடுவெட்டாங்குறிச்சியில் வேளாண்மை உழவா் நலத் துறை முகாம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள காடுவெட்டாங்குறிச்சி கிராமத்தில், உழவரைத் தேடி, வேளாண்மை உழவா் நலத்துறை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமில், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்ச... மேலும் பார்க்க

நூறு நாள் வேலை கேட்டு இந்திய கம்யூ. கட்சியினா் மனு அளிப்பு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில், 100 நாள் வேலை கேட்டு செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட வந்த பொதுமக்கள், அதிகாரிகள் பேச்சுவாா்த்தையையடுத்து, மனு அளித... மேலும் பார்க்க