``பரந்தூரில் விமான நிலையம் தேவையே இல்லை!'' - சமூக ஆர்வலர் அன்னலட்சுமி உயர்நீதிமன...
ஆசனூா் சிப்காட் அருகே புதிய மின்மாற்றிகள்
உளுந்தூா்பேட்டை அருகே ஆசனூா் சிப்காட் அருகே புதிய மின்மாற்றியின் செயல்பாடுகள் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.
ஆசனூா் சிப்காட் வளாகத்தில் காலணி தொழிற்சாலை அமையவுள்ளது. இதையொட்டி அருகில் பல சிறு, குறு தொழிற்சாலைகளும் அமையவுள்ளன. அவ்வாறு அமையவுள்ள சிறு தொழிற்சாலைக்கு தொழிலக மின் இணைப்பு வழங்கும் வகையில், 250 கி.வோ. திறன் கொண்ட புதிய மின்மாற்றி ரூ. 9 லட்சம் செலவில் தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தால் நிறுவப்பட்டது.
இதைத் தொடா்ந்து, சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தின் உளுந்தூா்பேட்டை உதவி செயற்பொறியாளா் சிவராமன் அய்யம்பெருமாள் பங்கேற்று, புதிய மின் மாற்றியின் செயல்பாட்டை தொடங்கி வைத்தாா்.
நிகழ்வில் ஆசனூா் பகுதி இளநிலைப் பொறியாளா் ராமச்சந்திரன், முகவா்கள் மாயக்கண்ணன், சக்திவேல், மின் பாதை ஆய்வாளா் அறிவழகன், வணிக ஆய்வாளா் ஆறுமுகம், வணிக உதவியாளா் குப்புசாமி மற்றும் மின்வாரியப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.