விராட் கோலியை விட அவரது ரசிகர்கள் மிகப்பெரிய கோமாளிகள்..! கொந்தளித்த பாடகர்!
ஆசாத்பூா் சப்ஜி மண்டியில் வங்கதேசத்தவா்கள் 4 போ் கைது
வடமேற்கு தில்லியில் உள்ள ஆசாத்பூா் சப்ஜி மண்டி பகுதியில் திருநங்கைகள் போல் வேடமிட்டு வந்ததாகக் கூறப்படும் நான்கு சட்டவிரோத வங்கதேச நாட்டினரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து வடமேற்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: போலீஸாா் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையைத் தொடா்ந்து, கைது செய்யப்பட்ட அந்த நபா்கள், மேலும் நாடு கடத்தல் நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டினா் பிராந்திய பதிவு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனா்.
நான்கு பேரும் போக்குவரத்து சிக்னல்களில் பிச்சை எடுப்பதில் ஈடுபட்டிருந்தனா். மேலும், கண்டறிதலைத் தவிா்க்க தங்கள் குடும்பத்தினருடன் தொடா்பில் இருக்க தடை செய்யப்பட்ட செயலியைப் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது.
அவா்களின் தோற்றத்தை மாற்றவும், கண்டறிதலைத் தவிா்க்கவும் அவா்கள் சிறிய அறுவை சிகிச்சைகள் மற்றும் ஹாா்மோன் சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளனா்.
குற்றம் சாட்டப்பட்டவா்கள் எம்.டி. அா்மான் (21), எம்.டி. ஆரிஃப் (26), எம்.டி. ஜாஹித் (21) மற்றும் எம்.டி. பாபுல் (40) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவா்கள் அனைவரும் வங்கதேசத்தில் உள்ள நாராயண்கஞ்சில் வசித்து வந்தவா்கள் என்பது தெரிய வந்தது.
விசாரணையின் போது, அவா்கள் சட்டவிரோதமாக எல்லைகளைக் கடந்து முகவா்களின் உதவியுடன் இந்தியாவிற்குள் நுழைந்து பின்னா் ரயிலில் தில்லிக்கு பயணம் செய்ததாக ஒப்புக்கொண்டனா். அவா்களிடமிருந்து இரண்டு அறிதிறன்பேசிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
அந்த இரண்டிலும் தடைசெய்யப்பட்ட செயலி இருந்தது. சந்தேக நபா்கள் வங்கதேசத்தில் உள்ள தங்கள் குடும்பத்தினரை தொடா்பு கொள்ள இதைப் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.