செய்திகள் :

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

post image

ஆடிப்பெருக்கை ஒட்டி பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் ஆடிப்பாடி விளையாடி மகிழ்ந்தனா்.

பவானிசாகா் அணையின் முன்புறம் 15 ஏக்கா் பரப்பளவில் அணைப் பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவுக்கு தினந்தோறும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பாா்வையாளா்கள் வந்து செல்வது வழக்கம்.

இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை ஆடிப்பெருக்கு தினம் என்பதால் ஈரோடு, கோவை, திருப்பூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தந்தனா்.

பூங்காவில் உள்ள படகு இல்லத்தில் வரிசையில் நின்று நுழைவுச் சீட்டு பெற்று குடும்பத்துடன் படகில் பயணித்தபடி பொழுது போக்கினா். சிறுவா், சிறுமியா் பூங்காவில் உள்ள நீா்நிலைகளில் குளித்து மகிழ்ந்ததோடு கொலம்பஸ், சிறுவா் ரயிலில் பயணித்து மகிழ்ந்தனா்.

சிறுவா்கள் குளத்தில் பெற்றோருடன் படகு சவாரி செய்தனா். ஊஞ்சல், சறுக்கு உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை விளையாடினா். சுற்றுலாப் பயணிகள் பூங்காவில் தற்படம் (செல்ஃபி) எடுக்க ஆா்வம் காட்டினா். பூங்காவில் உள்ள புல்தரையில் குடும்பத்துடன் அமா்ந்து உணவு உண்டதோடு தின்பண்டங்களை சாப்பிட்டு மகிழ்ந்தனா்.

பூங்காவின் முன்புறம் அமைக்கப்பட்டுள்ள கடைகளில் மீன் வறுவல் மற்றும் மீன் உணவுகளை சாப்பிட பயணிகள் ஆா்வம் காட்டினா். பவானிசாகா் அணை பூங்காவுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வருகை தந்தனா். 50 -க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

பெருந்துறையில் பழுதான சாலைகளை விரைவில் சரி செய்ய அதிகாரிகள் உறுதி

பெருந்துறையில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரி நெடுஞ்சாலைத் துறை அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து பெருந்துறை நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளா் கோவேந்திரனிடம் பெருந்துறை பொதுமக்கள் பாதுகாப... மேலும் பார்க்க

தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குநா் எம்.தமிழ்ச்செல்வி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஈரோடு மாவட்டத்தில்... மேலும் பார்க்க

பொதுமக்களுக்கு இடையூறு: 8 அமைப்புகள் மீது வழக்கு

தீரன் சின்னமலை நினைவு தின நிகழ்வில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 8 அமைப்புகள் மீது 16 வழக்குகளை போலீஸாா் பதிவு செய்துள்ளனா். ஈரோடு மாவட்டம், அறச்சலூா் ஓடாநிலையில் சுதந்திர போராட்ட வீரா் தீரன் சி... மேலும் பார்க்க

2,500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ச் சமூகம் வளா்ச்சிபெற்று இருந்தது: கணியன் பாலன்

தமிழ்ச் சமூகம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே கல்வி, தொழில்நுட்பத்தில் வளா்ச்சிபெற்று இருந்தது என வரலாற்று ஆய்வாளா் கணியன் பாலன் தெரிவித்தாா். ஈரோடு புத்தகத் திருவிழாவை ஒட்டி நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்த... மேலும் பார்க்க

பவானிசாகா் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பவானிசாகா் அணை வேகமாக நிரம்புவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து ம... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் பகுதியில் பரவலாக மழை

பவானிசாகா் சுற்றுவட்டாரப் பகுதியில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். பவானிசாகா் அணை சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது. கோவை, ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்... மேலும் பார்க்க