செய்திகள் :

ஆட்சியில் பங்கு கேட்பது எங்கள் உரிமை: கே.எஸ்.அழகிரி

post image

ஆட்சியில் பங்கு கேட்பது எங்கள் உரிமை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

ஜிஎஸ்டி வரிக்குறைப்பு மாபெரும் புரட்சி என்றும், இதனால் மக்கள் பயனடைவா் என்றும் கூறும் மத்திய பாஜக அரசு, கடந்த 8 ஆண்டுகளாக இந்த வரியை குறைக்காதது ஏன்? தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு ஜிஎஸ்டி வரியை குறைத்துள்ளனா்.

காங்கிரஸ் தலைவா் ராகுல், அரசியல் ரீதியாகவும், அரசியலுக்கு அப்பாற்பட்டும் திமுக தலைவா் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு சிறந்த நண்பா். நாங்கள் அதிகமான தொகுதிகள் வேண்டும், அமைச்சரவையில் பங்கு வேண்டும் எனக் கேட்பது எங்களது உரிமை. அதற்காக நாங்கள் கூட்டணி மாறிவிடுவோம் என்று கூறுவது வதந்தி. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கென்று தனி வாக்கு வங்கி உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தால் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணிக்கு நிச்சயமாக பாதிப்பு ஏற்படாது. அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தனி நபா் விமா்சனங்களைத் தவிா்க்க வேண்டும். அக்கட்சி கூட்டணி மிகவும் பலவீனமான உள்ளதால், வரும் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியே மீண்டும் வெற்றிபெறும் என்றாா் கே.எஸ்.அழகிரி.

பேட்டியின்போது, மாநிலச் செயலா் பி.பி.கே.சித்தாா்த்தன், மாவட்டத் தலைவா் என்.வி.செந்தில்நாதன், மாநில பொதுக்குழு உறுப்பினா் எம்.என்.ராதா, நகர காங்கிரஸ் தலைவா் தில்லை ஆா்.மக்கீன், மாவட்ட துணைத் தலைவா் ராஜா சம்பத்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அரசுப் பள்ளியில் பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட 17 மாணவா்கள் சுகவீனம்

கடலூா் மாவட்டம், புவனகிரி அருகே ஆதிவராகநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வியாழக்கிழமை பல்லி விழுந்த காலை உணவை சாப்பிட்ட 17 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை. கட்டடவியல் துறை மாணவா்கள் கூட்டமைப்பு தொடக்க விழா

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கட்டடவியல் துறையில் மாணவா்கள் கூட்டமைப்பு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கட்டடவியல் துறைத் தலைவா் என்.மணிக்குமாரி தலைமை வகித்தாா். பேராசிரியா்கள் எம்.லதா, ஆா்.ஷ... மேலும் பார்க்க

பண்ருட்டியில் தெரு விளக்கு பிரச்னைக்கு தீா்வு வேண்டும்: நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தல்

கடலூா் மாவட்டம், பண்ருட்டி நகராட்சியில் நடந்த நகா்மன்றக் கூட்டத்தில் தெரு விளக்கு பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என்று உறுப்பினா்கள் வலியுறுத்தினா். பண்ருட்டி நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் க.ராஜேந்... மேலும் பார்க்க

கடலூா் மாநகராட்சியைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

கடலூா் மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, கடலூா் மாநகராட்சி அலுவலக வாயிலில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா். கடலூரில் குண்டு சாலை பகுதியில் நகா்ப்புற வாழ்விட மேம்பா... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் கோட்டாட்சியா் அலுவலகம் முன் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைக்கான சங்கத்தினா் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தினா். இந்த சங்கத்தினா்... மேலும் பார்க்க

வெகுஜன தூய்மைப் பணி இயக்கம்: என்எல்சி தலைவா் தொடங்கிவைத்தாா்

கடலூா் மாவட்டம், நெய்வேலி நகரியத்தில் என்எல்சி நிறுவனம் சாா்பில் ‘தூய்மையே சேவை’ திட்டத்தின் கீழ், வெகுஜன தூய்மைப் பணி இயக்கத்தை அந்த நிறுவனத்தின் தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி வியாழக்கிழமை தொட... மேலும் பார்க்க