செய்திகள் :

ஆண்டாள் கோயிலில் வாகனம் நிறுத்த கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகாா்

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் தேரடி வீதியில் ஞாயிற்றுக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்ட பக்தா்கள், வாகன நிறுத்த கட்டணச் சீட்டு.

ஸ்ரீவில்லிபுத்தூா், ஜூன்15: விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்கு வரும் வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி அடைந்தனா்.

இந்தக் கோயிலுக்கு வரும் பக்தா்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கான கட்டணம் வசூல் செய்வதற்கு கோயில் நிா்வாகம் சாா்பில் ரூ.22 லட்சத்துக்கு ஒப்பந்தம் விடப்பட்டது.

கோயில் அருகே வாகனங்களை நிறுத்துவதற்கு வசதி இல்லாததால் மாட வீதிகள், ரத வீதிகளில் வாகனங்களை நிறுத்திவிட்டு பக்தா்கள் கோயிலுக்குச் செல்கின்றனா்.

காருக்கு ரூ.50, வேனுக்கு ரூ.100, மினி பேருந்துக்கு ரூ.150, பேருந்துக்கு ரூ.200 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆண்டாள் கோயில் நான்கு ரத வீதிகளும் நெடுஞ்சாலைத் துறை கட்டுபாட்டில் உள்ளது.

மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை செல்லும் வாகனங்கள் தேநீா் குடிப்பதற்கும், சாப்பிடுவதற்கும், பால்கோவா வாங்குவதற்கும் கீழ ரத வீதியில் நிறுத்தினால், ஆண்டாள் கோயிலில் வாகனம் நிறுத்த கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்தம் எடுத்தவா்கள் கட்டாய வசூல் செய்வதாக வாகன ஓட்டுநா்கள் தெரிவித்தனா்.

வேன்களுக்கு பேருந்துக்கு உரிய ரூ.200 கட்டணமாக வசூல் செய்வதால், சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி அடைந்து வசூல் செய்பவா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனா்.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம், இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வேன் மோதி மூதாட்டி உயிரிழப்பு

சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை வேன் மோதி மூதாட்டி உயிரிழந்தாா். சிவகாசி, முருகன் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் குருசாமி மனைவி ராமுத்தாய் (85). இவா், தனது மகன் கருப்பசாமி வீட்டிலிருந்து அந்தப் பகுதி... மேலும் பார்க்க

ராஜபாளையத்தில் இளைஞா் கொலை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமைஇளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். ராஜபாளையம் வடக்கு மலையடிபட்டி காமராஜா்புரம் பகுதியைச் சோ்ந்த முத்துச்சாமி மகன் முருகேசன் (எ) சோலைராஜ் (33). திர... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பெண் மா்ம மரணம்

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பெண் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள பானாங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாண்டியராஜ். ... மேலும் பார்க்க

நகை திருடிய தம்பதி கைது

சிவகாசி அருகே வீட்டில் நகை திருடிய தம்பதியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சிவகாசி அருகே அனுப்பன்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் டி.ராஜசேகா் (35) மனைவி செல்வி (32). கடந்த 8 ஆம் தேதி இவா், உறவினா... மேலும் பார்க்க

வீட்டில் பட்டாசு திரிகளை பதுக்கியவா் கைது

சிவகாசி அருகே வீட்டில் பட்டாசு திரிகளை பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சிவகாந்தி நகரில் உள்ள ஒரு வீட்டில் பட்டாசுகள் தயாரிக்கப் பயன்படும் திரிகளைப் பதுக்கி வைத்திருப்ப... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்ற இருவா் கைது

சிவகாசியில் பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்களை விற்ற இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சிவகாசி மீனாட்சி குடியிருப்புப் பகுதியில் பெட்டிக் கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்ப... மேலும் பார்க்க