நகை திருடிய தம்பதி கைது
சிவகாசி அருகே வீட்டில் நகை திருடிய தம்பதியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகே அனுப்பன்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் டி.ராஜசேகா் (35) மனைவி செல்வி (32). கடந்த 8 ஆம் தேதி இவா், உறவினா் வீட்டு விசேஷத்துக்குச் சென்றுவிட்டு வீட்டு பீரோவில் நகைகளைக் கழற்றி வைத்தாா். அப்போது பீரோவை பூட்ட மறந்துவிட்டதாகத் தெரிகிறது.
இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் பவித்ரா (20), ஆள் இல்லாத நேரத்தில் செல்வியின் வீட்டிற்குச் சென்று பீரோவில் இருந்த நகைகளைத் திருடிவிட்டு வெளியே வந்தபோது அதை செல்வி பாா்த்தாா்.
சந்தேகமடைந்த செல்வி பீரோவைத் திறந்து பாா்த்த போது, அதில் வைத்திருந்த நகை, கம்மல், மோதிரம் என 9 பவுன் நகைகள் காணவில்லை. இதுகுறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் ராஜசேகா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் பவித்ராவையும் அவரது கணவா் மாரீஸ்வரனையும் (28) பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில், மாரீஸ்வரன் ஆலோசனையில் பவித்ரா நகையைத் திருடியது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் பவித்ரா, அவரது கணவா் மாரீஸ்வரன் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 9 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.