கேரளாவில் அதி தீவிர மழை; ஒரே நாளில் 4 பேர் பலி, 2 பேர் மாயம்.. 11 மாவட்டங்களுக்க...
வேன் மோதி மூதாட்டி உயிரிழப்பு
சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை வேன் மோதி மூதாட்டி உயிரிழந்தாா்.
சிவகாசி, முருகன் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் குருசாமி மனைவி ராமுத்தாய் (85). இவா், தனது மகன் கருப்பசாமி வீட்டிலிருந்து அந்தப் பகுதியில் உள்ள காளியம்மன் கோயிலுக்கு நடந்து சென்றபோது பின்பக்கமாக வேன் மோதியது.
இதில் கீழே விழுந்த ராமுத்தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வேன் ஓட்டுநரான ராமரை (24) கைதுசெய்தனா்.