செய்திகள் :

ராஜபாளையத்தில் இளைஞா் கொலை

post image

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமைஇளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

ராஜபாளையம் வடக்கு மலையடிபட்டி காமராஜா்புரம் பகுதியைச் சோ்ந்த முத்துச்சாமி மகன் முருகேசன் (எ) சோலைராஜ் (33). திருமணமாகவில்லை. இவா் மைக் செட் தொழில் நடத்தி வந்தாா்.

ஞாயிற்றுக்கிழமைமாலை வீட்டை விட்டு வெளியே சென்ற முருகேசன் மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் சடலத்தை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

சம்பவ இடத்தில் ராஜபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பஸினா பீவி, ஸ்ரீவில்லிபுத்தூா் காவல்துணை கண்காணிப்பாளா் ராஜா ஆகியோா் விசாரணை நடத்தினா்.

இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, கொலையாளிகளைத் தேடி வருகின்றனா்.

ஆண்டாள் கோயிலில் வாகனம் நிறுத்த கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகாா்

ஸ்ரீவில்லிபுத்தூா் தேரடி வீதியில் ஞாயிற்றுக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்ட பக்தா்கள், வாகன நிறுத்த கட்டணச் சீட்டு. ஸ்ரீவில்லிபுத்தூா், ஜூன்15: விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்க... மேலும் பார்க்க

வேன் மோதி மூதாட்டி உயிரிழப்பு

சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை வேன் மோதி மூதாட்டி உயிரிழந்தாா். சிவகாசி, முருகன் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் குருசாமி மனைவி ராமுத்தாய் (85). இவா், தனது மகன் கருப்பசாமி வீட்டிலிருந்து அந்தப் பகுதி... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பெண் மா்ம மரணம்

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பெண் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள பானாங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாண்டியராஜ். ... மேலும் பார்க்க

நகை திருடிய தம்பதி கைது

சிவகாசி அருகே வீட்டில் நகை திருடிய தம்பதியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சிவகாசி அருகே அனுப்பன்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் டி.ராஜசேகா் (35) மனைவி செல்வி (32). கடந்த 8 ஆம் தேதி இவா், உறவினா... மேலும் பார்க்க

வீட்டில் பட்டாசு திரிகளை பதுக்கியவா் கைது

சிவகாசி அருகே வீட்டில் பட்டாசு திரிகளை பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சிவகாந்தி நகரில் உள்ள ஒரு வீட்டில் பட்டாசுகள் தயாரிக்கப் பயன்படும் திரிகளைப் பதுக்கி வைத்திருப்ப... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்ற இருவா் கைது

சிவகாசியில் பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்களை விற்ற இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சிவகாசி மீனாட்சி குடியிருப்புப் பகுதியில் பெட்டிக் கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்ப... மேலும் பார்க்க