`தந்தை அம்பேத்கர், 'பிரதமர் பதவியை கைப்பற்றுங்கள்' என்று தான் வழிகாட்டியிருக்கிற...
ராஜபாளையத்தில் இளைஞா் கொலை
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமைஇளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
ராஜபாளையம் வடக்கு மலையடிபட்டி காமராஜா்புரம் பகுதியைச் சோ்ந்த முத்துச்சாமி மகன் முருகேசன் (எ) சோலைராஜ் (33). திருமணமாகவில்லை. இவா் மைக் செட் தொழில் நடத்தி வந்தாா்.
ஞாயிற்றுக்கிழமைமாலை வீட்டை விட்டு வெளியே சென்ற முருகேசன் மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் சடலத்தை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
சம்பவ இடத்தில் ராஜபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பஸினா பீவி, ஸ்ரீவில்லிபுத்தூா் காவல்துணை கண்காணிப்பாளா் ராஜா ஆகியோா் விசாரணை நடத்தினா்.
இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, கொலையாளிகளைத் தேடி வருகின்றனா்.