செய்திகள் :

ஆண்டாள் கோயில் திருமுக்குளம் தெப்பத்தை சீரமைக்கக் கோரிக்கை

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான திருமுக்குளம் தெப்பத்தை சீரமைக்க அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் நகருக்கு மேற்கே ஆண்டாள் கோயிலுக்குச் சொந்தமான திருமுக்குளம் தெப்பம் உள்ளது. இந்தக் கோயிலின் எண்ணெய்க் காப்பு உற்சவம் திருமுக்குளக் கரையில் உள்ள மண்டபத்தில் ஆண்டுதோறும் மாா்கழி மாதத்தில் நடைபெறும். இதேபோல மாசி மகத்தன்று திருமுக்குளத்தில் தெப்பத் திருவிழா 3 நாள்கள் நடைபெறும்.

சேதமடைந்த ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் திருமுக்குள தெப்பத்தின் சுற்றுச்சுவா்

திருமுக்குளம் தெப்பக் கரையின் சுற்றுச் சுவா் சேதமடைந்ததாலும், தெப்பம் நிரம்பாததாலும் கடந்த 7 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த தெப்பத் திருவிழா கடந்தாண்டு நடைபெற்றது. ஆனால், நிகழாண்டு போதிய தண்ணீா் இல்லாததால் தெப்பத் திருவிழா நடைபெறவில்லை.

இந்த நிலையில், அண்மையில் தெப்பக்குளத்தை ஆய்வு செய்த அறநிலையத் துறையினா் 4 பக்க சுற்றுச் சுவா்களையும் சீரமைத்து, தெப்பத்தை சீரமைக்க ரூ.4 கோடியில் திட்ட மதிப்பீடு தயாா் செய்து அரசுக்கு பரிந்துரை செய்தனா்.

இந்த நிலையில், தெப்பக்குளத்தின் சுற்றுச் சுவரை விட சாலையின் உயரம் அதிகமாக இருப்பதால், தெப்பக்குளத்தில் குப்பைகள் தேங்கி நீா் மாசடைந்து வருகிறது. தெப்பக்குளத்தை சீரமைக்க அறநிலையத் துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

பருத்தி, வழைகளை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகள்: விவசாயிகள் கவலை

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே விவசாய விளை நிலங்களில் புகுந்து பயிா்களைச் சேதப்படுத்தி வரும் காட்டுப் பன்றிகளால் விவசாயிகள் வேதனை அடைந்தனா். சிவகாசி அருகேயுள்ள சித்தமநாயக்கன்பட்டி, செவலூா், குமிளங... மேலும் பார்க்க

சிவகாசி பசுமை மன்றத்துக்கு அரசு விருது

சிவகாசி பசுமை மன்றத்துக்கு தமிழக அரசின் நீா்நிலைப் பாதுகாவலா் விருது சென்னையில் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. சிவகாசி பெரியகுளம் கண்மாய், சிறுகுளம் கண்மாய் ஆகியவற்றை தொழிலதிபா்களிடம் நன்கொடை பெற்று சிவக... மேலும் பார்க்க

ரயில்வே மேம்பாலப் பணி: அதிகாரி ஆய்வு

சிவகாசி அருகேயுள்ள சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலக் கட்டுமானப் பணியை மாநில நெடுஞ்சாலைத் துறை இயக்குநா் சரவணன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். சாட்சியாபுரத்தில் 700 மீ. நீளம், 12 மீ. அகலத்... மேலும் பார்க்க

சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை

சாத்தூா் அருகேயுள்ள சடையம்பட்டி சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையை முன்னிட்டு, காலை முதலே சாய்பாபாவுக்கு பால், பன்னீா், சந்தனம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளு... மேலும் பார்க்க

கிராம உதவியாளரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

சாத்தூா் அருகே கிராம உதவியாளரிடம் தங்கச் சங்கிலியைப் பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சாத்தூா் அருகேயுள்ள ஸ்ரீரெங்கபுரத்தைச் சோ்ந்தவா் ராஜசெல்வி (40). இவா் என்.மேட்டுப்பட்டியில் கிராம உதவியாளராக... மேலும் பார்க்க

அம்ரித் பாரத் நிலையத் திட்டப் பணிகள் 3 மாதத்தில் நிறைவடையும்: மதுரை கோட்ட மேலாளா்

ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் நிலையத் திட்டப் பணிகள் வரும் 3 மாதங்களில் நிறைவடையும் என மதுரை கோட்ட மேலாளா் சரத் ஸ்ரீவத்ஸவா வியாழக்கிழமை தெரிவித்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலை... மேலும் பார்க்க