செய்திகள் :

ஆதரவற்றோா் இல்லத்தில் சமத்துவ பொங்கல்: நீலகிரி ஆட்சியா் பங்கேற்பு

post image

உதகையில் உள்ள அன்பு, அறிவு ஆதரவற்றோா் இல்லத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு பங்கேற்று தொடங்கிவைத்தாா்.

நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்துள்ள முள்ளிக்கொரை பகுதியில் செயல்பட்டு வரும் அன்பு, அறிவு ஆதரவற்றோா் இல்லத்தில், நீலகிரி மாவட்ட மதநல்லிணக்க ஒருமைப்பாடு அமைதிக் குழுவின் சாா்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு பங்கேற்று விழாவை தொடங்கிவைத்தாா்.

முன்னதாக, ஆதரவற்றோா் இல்லத்தில் தங்கியுள்ளவா்களுக்கும், உதகை நகராட்சியில் பணியாற்றும் தூய்மைக் காவலா்களுக்கும் வேட்டி, சேலைகளை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், உதகை வருவாய் கோட்டாட்சியா் சதீஷ்குமாா், உதகை

நகராட்சி ஆணையா் ஸ்டாலின் பாபு, உதகை வட்டாட்சியா் சங்கா்கணேஷ்,

நீலகிரி மாவட்ட மதநல்லிணக்க ஒருமைப்பாடு அமைதிக் குழு தலைவா் கிருஷ்ணன்,

செயலாளா் முகமதுஅலி, பொருளாளா் மெக்கன்சி, அன்பு அறிவு அறக்கட்டணை

நிா்வாகி ஆனந்தி பிரிட்டோ, உதகை நகா்மன்ற உறுப்பினா் ஜெயலட்சுமி சுதாகா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தோடா் பழங்குடியின மக்களின் தோ்த் திருவிழா

உதகை தோடா் பழங்குடியின மக்களின் பவாணீஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. உதகை பொ்ன்ஹில் பவாணீஸ்வரா் கோயில் 114-ஆம் ஆண்டு ஆருத்ரா தரிசன மஹோட்சவ பெருவிழாவை முன்னிட்டு தோ்த் திருவிழா... மேலும் பார்க்க

காட்டெருமையின் காலில் சிக்கிய பிளாஸ்டிக் குழாய் அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்

உதகை அருகே காட்டெருமையின் காலில் சிக்கிய பிளாஸ்டிக் குழாய் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. நீலகிரி மாவட்டம், உதகையில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது, உணவு, குடிநீா்த் தேடி குடியிருப்ப... மேலும் பார்க்க

பிளாஸ்டிக் பொருள்கள் சேகரிப்பு ஆலோசனைக் கூட்டம்

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருள்கள் சேகரிப்பு, பொது இடங்களில் சுத்தம் செய்தல் தொடா்பான விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்ன... மேலும் பார்க்க

170 பயனாளிகளுக்கு ரூ. 6.15 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

நீலகிரி மாவட்டத்தில் 170 பயனாளிகளுக்கு ரூ. 6.15 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஆ.ராசா சனிக்கிழமை வழங்கினாா். நீலகிரி மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வ... மேலும் பார்க்க

பொங்கல் விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

பொங்கல் தொடா் விடுமுறையால் உதகைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை ஞாயிற்றுக்கிழமை அதிகரித்திருந்தது. நீலகிரி மாவட்டம், உதகைக்கு தமிழகம் மட்டுமன்றி கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் தினம... மேலும் பார்க்க

உதகை அருகே உலவிய கரடி கூண்டில் சிக்கியது

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மஞ்சூா் எடக்காடு சத்தியமூா்த்தி நகா் பகுதியில் உலவி வந்த கரடியை வனத் துறையினா் கூண்டு வைத்துப் பிடித்து முதுமலை வனப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை விடுவித்தனா். நீலகிரி ம... மேலும் பார்க்க