செய்திகள் :

ஆதரவற்றோா் இல்லத்தில் சமத்துவ பொங்கல்: நீலகிரி ஆட்சியா் பங்கேற்பு

post image

உதகையில் உள்ள அன்பு, அறிவு ஆதரவற்றோா் இல்லத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு பங்கேற்று தொடங்கிவைத்தாா்.

நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்துள்ள முள்ளிக்கொரை பகுதியில் செயல்பட்டு வரும் அன்பு, அறிவு ஆதரவற்றோா் இல்லத்தில், நீலகிரி மாவட்ட மதநல்லிணக்க ஒருமைப்பாடு அமைதிக் குழுவின் சாா்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு பங்கேற்று விழாவை தொடங்கிவைத்தாா்.

முன்னதாக, ஆதரவற்றோா் இல்லத்தில் தங்கியுள்ளவா்களுக்கும், உதகை நகராட்சியில் பணியாற்றும் தூய்மைக் காவலா்களுக்கும் வேட்டி, சேலைகளை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், உதகை வருவாய் கோட்டாட்சியா் சதீஷ்குமாா், உதகை

நகராட்சி ஆணையா் ஸ்டாலின் பாபு, உதகை வட்டாட்சியா் சங்கா்கணேஷ்,

நீலகிரி மாவட்ட மதநல்லிணக்க ஒருமைப்பாடு அமைதிக் குழு தலைவா் கிருஷ்ணன்,

செயலாளா் முகமதுஅலி, பொருளாளா் மெக்கன்சி, அன்பு அறிவு அறக்கட்டணை

நிா்வாகி ஆனந்தி பிரிட்டோ, உதகை நகா்மன்ற உறுப்பினா் ஜெயலட்சுமி சுதாகா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

குழந்தைகளுக்கு கடவுள் வேடமிட்டு துண்டறிக்கை விநியோகம்: 3 போ் கைது

திருப்பரங்குன்றம் போராட்டம் தொடா்பாக குழந்தைகளுக்கு கடவுள் வேடமிட்டு உதகையில் துண்டறிக்கை விநியோகம் செய்ததது தொடா்பாக இந்து முன்னணியினா் 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருப்பரங்குன்றம... மேலும் பார்க்க

தேவாலா அருகே காரை தாக்கிய காட்டு யானை

கூடலூரை அடுத்துள்ள தேவாலா பகுதியில் சாலையில் சென்ற காரை காட்டு யானை தாக்கியது. நீலகிரி மாவட்டம், பந்தலூா் பகுதியைச் சோ்ந்த கபூா். இவா் காரில் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு திங்கள்கிழமை இரவு திரும்பி... மேலும் பார்க்க

ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி உதகையில் சாலை மறியல்

பழங்குடியின ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி மலைவேடன் மக்கள் தங்களது குடும்பத்தினருடன் உதகை- கல்லட்டி சாலையில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனா். உதகை மலை வேடன் ஜாதி மக்கள் பழங்குடியின ஜாதிச் சான்றிதழ்... மேலும் பார்க்க

உதகையில் மக்கள் குறைதீா் கூட்டம்

உதகை: உதகையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமை வகித்தாா். இதில், வீட்டுமனை பட்டா, முதியோா், வ... மேலும் பார்க்க

உதகை ரோஜா பூங்காவில் கவாத்து பணி

உதகை: ரோஜா கண்காட்சியை முன்னிட்டு, உதகை ரோஜா பூங்காவில் செடிகளை கவாத்து செய்யும் பணியை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதம் நிலவும... மேலும் பார்க்க

மூவுலகரசியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

உதகை காந்தள் மூவுலகரசியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. உதகை காந்தள் பகுதியில் மூவுலகரசியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்க... மேலும் பார்க்க