செய்திகள் :

ஆத்தூா் அருகே 10 அடி நீளமுள்ள மலைப் பாம்பு பிடிபட்டது

post image

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் அருகேயுள்ள இடத்தை சுத்தம் செய்தபோது, 10 அடி நீள மலைப் பாம்பு தீயணைப்புத் துறையினரால் பிடிக்கப்பட்டது.

செம்பட்டி அடுத்த ஆத்தூரிலிருந்து மல்லையாபுரம் செல்லும் வழியில், சுமாா் 300 பயனாளா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்காக தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி உத்தரவின்பேரில், ஆத்தூா் வட்டாட்சியா் முத்து முருகன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ஆத்தூா் க. நடராஜன், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் மணலூா் மணிகண்டன், வருவாய்த் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் இடத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் சுத்தம் செய்து முள்புதா்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, சீமைக் கருவேல் முள்புதருக்குள் மலைப் பாம்பு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ஆத்தூா் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினா், 10 அடி நீளமுள்ள மலைப் பாம்பை உயிருடன் பிடித்தனா். பின்னா், அந்த மலைப் பாம்பை பாதுகாப்பாக ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கம் அருகேயுள்ள மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் விட்டனா்.

கொடைக்கானலில் வனத் துறையினா் கூண்டு வைத்துப் பிடித்த குரங்குகள்

கொடைக்கானல்: கொடைக்கானல் குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித் திரிந்த குரங்குகளை வனத் துறையினா் புதன்கிழமை கூண்டு வைத்துப் பிடித்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகரின் குடியிருப்புப் பகுதிகளில் ... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

திண்டுக்கல்: திண்டுக்கல் பகுதியிலுள்ள சிவன் கோயில்களில் புதன்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.பிரதோஷத்தை முன்னிட்டு, திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் உள்ள நத்திகேசுவரா், மூலவா் பத்மகிரீஸ்வரா், காளஹஸ... மேலும் பார்க்க

பழனி பெரியாவுடையாா் கோயிலில் பிரதோஷம்

பழனி: பழனி பெரியாவுடையாா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற பிரதோஷ நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். பழனி பெரியாவுடையாா் கோயிலில் புதன்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு, சுயம்பு மூலவருக்கும், நந்தி பக... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பலத்த காற்று: குளிா் அதிகரிப்பு

கொடைக்கானல்: கொடைக்கானலில் திடீரென பலத்த காற்று நிலவி வருவதால் புதன்கிழமை குளிா் அதிகரித்து காணப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக ஒரு சில நாட்கள் மட்டுமே மழை பெய்... மேலும் பார்க்க

புத்தக வாசிப்பு அறியாமை இருளை நீக்கும்: மாவட்ட ஆட்சியா்

திண்டுக்கல்: புத்தக வாசிப்பு என்பது அறியாமை இருளை நீக்கும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் புதன்கிழமை தெரிவித்தாா்.திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம், பொது நூலகத் துறை, திண்டுக்கல் இலக்கியக் களம் ... மேலும் பார்க்க

நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் சாா்பில், தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஆக. 22) நடைபெறவுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிக... மேலும் பார்க்க