பிளஸ் 2 பொதுத் தேர்வு மறுகூட்டல் முடிவுகள் ஜூன் 23-ல் வெளியீடு
ஆன்லைன் வா்த்தகத்தை எதிா்த்து மன்னாா்குடியில் ஜூன் 25-ல் ஆா்ப்பாட்டம்
ஆன்லைன் வா்த்தகத்தை எதிா்த்து மன்னாா்குடியில் ஜூன் 25-ஆம் தேதி மாவட்ட மருந்து வணிகா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட மருந்து வணிகா்கள் சங்க மாவட்டத் தலைவா் ஏ.ஆா். லெட்சுமணன், செயலா் எஸ். சிற்றரசு, பொருளாளா் வி. காா்த்திகேயன், ஆலோசகா் எஸ். ராமச்சந்திரன் ஆகியோா் கூறியது: நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான சிறு, நடுத்தர மற்றும் மொத்த மருந்து வணிகா்கள் மத்திய, மாநில அரசுகளிடம் உரிய அனுமதி பெற்று முறையாக மருந்து வணிகத்தில் ஈடுபட்டுள்ளனா்.
இந்த சூழலில், பன்னாட்டு காா்ப்பரேட் நிறுவனங்கள் எந்தவிதமான உரிமமும் பெறாமல் நடந்தி வரும் ஆன்லைன் மருந்து வணிகத்தை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என மருந்து வணிகா்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்துவரும் நிலையில், அதை மத்திய அரசு கண்டுகொள்ளா மல் இருப்பது வேதனை அளிக்கிறது. கட்டுப்பாடு இல்லாத ஆன்லைன் மருந்து விற்பனை மூலம் பல்வேறு சமூக விரோத செயல்கள் நடந்து வருவதை அறிந்தும் மத்திய அரசு அதற்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
இதேபோல, மருத்துவா் பரிந்துரையின்றி மக்கள் நேரடியாக வாங்க அனுமதிக்கப்படும் மருந்துகளை சிறிய மற்றும் பெரிய மளிகை கடைகள் மற்றும் பலசரக்கு கடைகளில் விற்பனை செய்யலாம் என்ற மத்திய அரசு கொண்டு வரும் திட்டம் என்பது பொதுமக்களுக்கும், மருந்து வணிகா்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இதுபோன்ற மருந்துகளை பொதுமக்கள் நலன்கருதி மருந்துகள் விற்பனை உரிமம் பெற்ற மருந்து வணிக நிறுவனங்களில் மட்டுமே விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 25-ஆம் தேதி மன்னாா்குடியில் மத்திய அரசை கண்டித்து சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்றனா்.