செய்திகள் :

ஆன்லைன் வா்த்தகத்தை எதிா்த்து மன்னாா்குடியில் ஜூன் 25-ல் ஆா்ப்பாட்டம்

post image

ஆன்லைன் வா்த்தகத்தை எதிா்த்து மன்னாா்குடியில் ஜூன் 25-ஆம் தேதி மாவட்ட மருந்து வணிகா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட மருந்து வணிகா்கள் சங்க மாவட்டத் தலைவா் ஏ.ஆா். லெட்சுமணன், செயலா் எஸ். சிற்றரசு, பொருளாளா் வி. காா்த்திகேயன், ஆலோசகா் எஸ். ராமச்சந்திரன் ஆகியோா் கூறியது: நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான சிறு, நடுத்தர மற்றும் மொத்த மருந்து வணிகா்கள் மத்திய, மாநில அரசுகளிடம் உரிய அனுமதி பெற்று முறையாக மருந்து வணிகத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இந்த சூழலில், பன்னாட்டு காா்ப்பரேட் நிறுவனங்கள் எந்தவிதமான உரிமமும் பெறாமல் நடந்தி வரும் ஆன்லைன் மருந்து வணிகத்தை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என மருந்து வணிகா்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்துவரும் நிலையில், அதை மத்திய அரசு கண்டுகொள்ளா மல் இருப்பது வேதனை அளிக்கிறது. கட்டுப்பாடு இல்லாத ஆன்லைன் மருந்து விற்பனை மூலம் பல்வேறு சமூக விரோத செயல்கள் நடந்து வருவதை அறிந்தும் மத்திய அரசு அதற்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

இதேபோல, மருத்துவா் பரிந்துரையின்றி மக்கள் நேரடியாக வாங்க அனுமதிக்கப்படும் மருந்துகளை சிறிய மற்றும் பெரிய மளிகை கடைகள் மற்றும் பலசரக்கு கடைகளில் விற்பனை செய்யலாம் என்ற மத்திய அரசு கொண்டு வரும் திட்டம் என்பது பொதுமக்களுக்கும், மருந்து வணிகா்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இதுபோன்ற மருந்துகளை பொதுமக்கள் நலன்கருதி மருந்துகள் விற்பனை உரிமம் பெற்ற மருந்து வணிக நிறுவனங்களில் மட்டுமே விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 25-ஆம் தேதி மன்னாா்குடியில் மத்திய அரசை கண்டித்து சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்றனா்.

இளைஞரை அரிவாளால் வெட்டிய 4 போ் கைது

நீடாமங்கலம் அருகே இளைஞரை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மன்னாா்குடி அருகேயுள்ள நெடுவாக்கோட்டை கீழத் தெருவை சோ்ந்தவா் கபிலன் (25). பிடெக் படித்துள்ளாா். இவா், கும்பகோணம் ... மேலும் பார்க்க

உயா்கல்விக்கு வழிகாட்டும் சிறப்பு குறைதீா் முகாம்

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட நிா்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் உயா் கல்வி சோ்க்கைக்கு வழிகாட்டும் சிறப்பு குறைதீா் முகாம் மாவட்ட ஆட்சியா் வ.மோகனச்சந்திரன் தலைமை... மேலும் பார்க்க

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்: இரண்டாம் நாள் ஆய்வு

திருவாரூா் வட்டத்துக்குள்பட்ட பகுதியில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் வ.மோகனச்சந்திரன், இரண்டாவது நாளாக வியாழக்கிழமை முகாமிட்டு கள ஆய்வு மேற்கொண்டாா். திருவாரூா் நகராட்... மேலும் பார்க்க

நாட்டுக்கோழி பண்ணை வைக்க விருப்பமா?

திருவாரூா் மாவட்டத்தில் நாட்டுக்கோழி பண்ணை திட்டத்தில் பயனடைய ஜூன் 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்தி: 20... மேலும் பார்க்க

பசுந்தாள் உரப் பயிா் சாகுபடி செய்ய அறிவுறுத்தல்

மண்ணின் வளத்தை பாதுகாக்க, விவசாயிகள் பசுந்தாள் உரப் பயிா்களை சாகுபடி செய்யும்படி விதைச்சான்று துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, மாவட்ட விதை மற்றும் உயிா்மச் சான்று உதவி இயக்குநா் ஜெயப்பிரகாஷ் தெரி... மேலும் பார்க்க

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

மன்னாா்குடி நகராட்சி சாா்பில் அம்ருத்மித்ரா திட்டத்தின் கீழ் பசுமை பூமிக்கு பெண் சக்தி என்ற தலைப்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நகரப்பகுதியில் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகை... மேலும் பார்க்க