செய்திகள் :

ஆபரேஷன் சிந்து: ஈரானிலிருந்து தாயகம் திரும்பிய 517 இந்தியர்கள்!

post image

ஆபரேஷன் சிந்து நடவடிக்கையின் மூலம், ஈரானிலிருந்து சுமார் 517 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளதாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இருநாடுகளும் இடையில் போர் துவங்கியுள்ள நிலையில், அந்நாடுகளிலுள்ள இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வருவதற்காக, மத்திய அரசு ஆபரேஷன் சிந்து எனும் மீட்புத் திட்டத்தை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில், ஈரான் சென்று கல்வி பயின்ற மாணவர்கள், அந்நாட்டில் வசித்தவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என ஏராளமான இந்தியர்கள் நேற்று (ஜூன் 20) இரவு மற்றும் இன்று (ஜூன் 21) காலை, வரை இயக்கப்பட்ட விமானங்கள் மூலம் தில்லி வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது:

“சிறப்பு விமானங்கள் மூலம் ஈரானிலிருந்த இந்தியர்கள் மீட்கப்பட்டு ஜூன் 20 ஆம் தேதி, இரவு 11.30 மணியளவில், புது தில்லி வந்தடைந்துள்ளனர்” எனக் கூறியுள்ளார்.

இதேபோன்று மற்றொரு பதிவில், துர்க்மெனிஸ்தான் நாட்டிலிருந்து இயக்கப்பட்ட மற்றொரு சிறப்பு விமானம் மூலமாக ஈரானிலிருந்து இந்தியர்கள் பத்திரமாக அழைத்து வரப்பட்டதாகவும்; இதன்மூலம், தற்போது வரை 517 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளதாகவும், அவர் அறிவித்துள்ளார்.

இத்துடன், இந்தியர்களை அழைத்து வருவதற்கு உதவிய ஈரான் அரசுக்கு. இந்திய அரசு நன்றிகளைத் தெரிவிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, ஈரானிலிருந்து இந்தியர்களை சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்து வருவதற்காக மட்டும், அந்நாடு தனது வான்வழியைத் திறந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: உலகத்தை இணைத்துள்ளது யோகா: பிரதமர் மோடி

அகமதாபாத் விமான விபத்து: 247 பேரின் டிஎன்ஏ உறுதி செய்யப்பட்டது!

அகமதாபாத் விமான விபத்தில் பலியான 247 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.இதுகுறித்து அகமதாபாத் சிவில் மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ராகேஷ்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் முக்கிய நகரில் இறைச்சி கடைகளுக்கு தடை: முதல்வர் ஃபட்னவீஸ்

மகாராஷ்டிரத்தில் ஆலந்தி நகரில் இறைச்சி கடைகளுக்கு தடை விதித்து அம்மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.புணே மாவட்டத்தில் உள்ள ஆலந்தியில் உள்ள பிரசித்திபெற்ற தியானேஷ்வரர் கோவிலி... மேலும் பார்க்க

திருப்பதியில் தீ விபத்து!

திருப்பதி கோவில் வளாகத்தில் இன்று(ஜூன் 21) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. திருப்பதியில் கடந்த சில நாள்களாக வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிக எண்ணிக்கையில் காணப்பட்ட நிலையில், சுமார் 24 மணிநேரம் வரை ப... மேலும் பார்க்க

யோகா நாள் சமூகத் திருவிழாவாக மாறியிருக்கிறது: ஆந்திர முதல்வரின் மகனுக்கு பிரதமர் புகழாரம்!

யோகா நாள் சமூகத் திருவிழாவாக மாறியிருக்கிறது என்று குறிப்பிட்டு ஆந்திர முதல்வரின் மகனுக்கு பிரதமர் புகழாரம் சூட்டினார். சா்வதேச யோகா தினம் இன்று(ஜூன் 21) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஆந்திர பிரதேசத்த... மேலும் பார்க்க

அரிய வகை ரத்தம் இனி எளிதாக கிடைக்கும்: ஐசிஎம்ஆர் புது முயற்சி!

அரிய வகை ரத்தம் இனி எளிதாக கிடைக்க ஏதுவாக ஐசிஎம்ஆர் புது முயற்சியை எடுத்துள்ளது. ஐசிஎம்ஆர் கீழ் செயல்படும் மும்பையில் உள்ள தேசிய இம்யூனோ ஹீமெடாலஜி நிறுவனம், நாட்டிலேயே முதல்முறையாக ‘அரிய வகை இரத்தப் ப... மேலும் பார்க்க

ஓய்வூதியம் பற்றி நல்ல செய்தியைத் தெரிவித்த நிதிஷ் குமார்!

பிகார் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தியுள்ளார் அந்த மாநில முதல்வர் நிதிஷ் குமார். பிகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையி... மேலும் பார்க்க