செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூர்: ஆதாரங்களை வெளியிட்ட இந்தியா!

post image

ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்களை இந்திய பாதுகாப்புப் படையினர் வெளியிட்டுள்ளனர்.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தாக்குதல் நடத்தினர்.

இதுதொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில், வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியுடன் ராணுவத்தின் கர்னல் சோபியா குரேஷி, விமானப் படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

அப்போது தாக்குதல் நடத்தப்பட்டதற்கான விடியோ, புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டனர்.

பதான்கோட் விமானப்படைத் தளத்தின் மீதான தாக்குதலுக்கு திட்டமிடப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீனின் மிகப்பெரிய முகாம்களில் ஒன்றான சியால்கோட் முகாமை அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவம் வெளியிட்ட புகைப்படம்

ஜம்மு - காஷ்மீரில் 4 காவலர்களை கொன்ற பயங்கரவாதிகள் பயிற்சி பெற்ற சியால்கோட்டில் உள்ள சர்ஜல் முகாம் அழிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைமையிடம், மும்பை தாக்குதல் பயங்கரவாதிகள் பயிற்சி பெற்ற முகாம் உள்ளிட்டவை அழிக்கப்பட்டுள்ளதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாகிஸ்தானின் எந்த ராணுவ நிலைகளும் குறிவைக்கவில்லை என்றும், பாகிஸ்தான் பொதுமக்கள் உயிரிழந்ததாக எவ்வித தகவலும் வெளியாகவில்லை என்றும் இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

இதையும் படிக்க : 12 நாள்கள் கவனமாக திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதல்!

தவறான தகவல்களைப் பரப்பும் பாகிஸ்தான்: சோஃபியா குரேஷி

பாகிஸ்தான் பல்வேறு தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகவும் இந்திய ராணுவ கர்னல் சோஃபியா குரேஷி விளக்கம் கொடுத்துள்ளார்.இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்துவந்த போர்ப் பதற்றம் இன்று மாலை 5 மணி முதல் முடிவுக்கு... மேலும் பார்க்க

பாகிஸ்தான் கடுமையான இழப்புகளை சந்தித்துள்ளது- விங் கமாண்டர் வியோமிகா சிங்

பாகிஸ்தான் கடுமையான இழப்புகளை சந்தித்துள்ளது என்று விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தில்லியில் சனிக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பின்போது அளித்த விளக்கத்தில், இந்தியா எந்தவொரு ... மேலும் பார்க்க

ராணுவ நடவடிக்கையை நிறுத்த இந்தியா-பாகிஸ்தான் ஒப்புதல்: ஜெய்சங்கர்

இந்தியா - பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கையை நிறுத்த ஒப்புதல் அளித்துள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் இரவு முழுவதும் நடைபெற்ற நீண்ட பேச்சுவார்த்தைக... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் அஜித் தோவல் சந்திப்பு

போர் நிறுத்த அறிப்பைத் தொடர்ந்து பிரதமர் மோடியை தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து பேசினார். பஹல்காம் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நடத்திய தாக்குதலில் ... மேலும் பார்க்க

மாலை 5 மணியிலிருந்து போர் நிறுத்தம் அமல்! -வெளியுறவுச் செயலர் மிஸ்ரி

புது தில்லி: இந்தியாவும் பாகிஸ்தானும் போரை நிறுத்த சம்மதம் தெரிவித்திருப்பதௌ குறித்து வெளியுறவுச் செயலர் மிஸ்ரி இன்று(மே 10) மாலை 6 மணிக்கு புது தில்லியில் நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் விளக... மேலும் பார்க்க

சிவப்பு எச்சரிக்கையின் கீழ் பார்மர் மாவட்டம்.. பொது இடங்களுக்குச் செல்ல வேண்டாம்: மாவட்ட ஆட்சியர்!

ஆபரேன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து எல்லையில் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ராஜஸ்தானில் உள்ள பார்மர் மாவட்டத்துக்குச் சிவப்பு எச்சரிக்கையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தியா - பாகிஸ்தான்... மேலும் பார்க்க