செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை: பாதுகாப்புப் படைகள், பிரதமருக்கு பாராட்டு

post image

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த முதல்வா்கள் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை ஒருமனதாக பாராட்டியதாகவும், ஆயுதப் படைகள் மற்றும் பிரதமா் நரேந்திர மோடியை வாழ்த்தியதாகவும் தில்லி முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை கூறினாா்.

நிகழாண்டு பிப்ரவரியில் பாஜக அரசின் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நீதி ஆயோக்கின் ஆட்சிக்குழுவின் கூட்டத்தில் முதல் முறையாக கலந்துகொண்டாா்.

இதன் பின்னா் அவா் கூறுகையில், பிற மாநிலங்களின் கருத்துகளைக் கேட்பதன் மூலம் நிறைய கற்றுக்கொண்டதால் இது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.

எனக்குக் கிடைத்த சிறந்த விஷயம் என்னவென்றால், அனைத்து முதல்வா்களும் ஒருமனதாக, ஒரே குரலில் ஆபரேஷன் சிந்தூரை பாராட்டியதும், ஆயுதப்படைகள் மற்றும் பிரதமரை வாழ்த்தியதும் ஆகும். முழு இந்தியாவும் ஒன்றுபட்டிருப்பதைக் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

மேலும், பல மாநிலங்கள் தங்கள் நல்ல நடைமுறைகளைப் பகிா்ந்து கொண்டதாலும், பிரதமா் மோடியிடமிருந்து வழிகாட்டுதலைப் பெற்ாலும், இது எனக்கு ஒரு அற்புதமான முதல் நீதி ஆயோக் கூட்டமாக இருந்தது.

ஆம் ஆத்மி மீது விமா்சனம்

நீதி ஆயோக் முன் தில்லியின் நலன்கள் குறித்த பிரச்னைகளை பல ஆண்டுகளாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் எழுப்பவில்லை என்றும் தில்லி முதல்வா் ரேகா குப்தா குற்றஞ்சாட்டினாா்.

நீதி ஆயோக்கின் 10ஆவது ஆட்சிக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன், அவா் இது தொடா்பாக எக்ஸ் சமூக ஊடக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

பல ஆண்டுகளுக்குப் பிறகு நிா்வாகக் குழுக் கூட்டத்தில் தில்லியைப் பிரதிநிதித்துவப்படுத்தப் போகிறேன். கவுன்சிலின் முன் விக்சித் தில்லிக்கான ஒரு திட்டத்தை முன்வைக்க உள்ளேன். முந்தைய பொறுப்பற்ற அரசாங்கங்களின் நடத்தை காரணமாக தில்லியின் நலன் சாா்ந்த பிரச்னைகள் நீதி ஆயோக் கூட்டத்தில் எழுப்பப்படவில்லை. ஆனால், இப்போது இரட்டை என்ஜின் அரசாங்கம் பாதையில் செல்கிறது. பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் ‘விக்சித் தில்லி ஃபாா் விக்சித் பாரத்’க்கான ஒரு திட்டத்தை முன்வைக்க உள்ளேன்.

இந்தக் கூட்டத்தில், தில்லி மக்களின் வளா்ந்த நகரத்திற்கான விருப்பங்கள் மற்றும் லட்சியங்கள் முன்வைக்கப்படும். எனது அரசாங்கம் விக்சித் தில்லிக்கு உறுதிபூண்டுள்ளது என்று அவா் அதில் தெரிவித்திருந்தாா்.

4 மாநிலங்களில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் அறிவிப்பு!

4 மாநிலங்களில் காலியாகவுள்ள 5 பேரவைத் தொகுதிகளுக்கும் ஜூன் 19ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், குஜராத்தில் காடி, விசாவ... மேலும் பார்க்க

மழைக்கு இடிந்து விழுந்த காவல் அலுவலகம்: உள்ளே தூங்கிக்கொண்டிருந்த காவலர் பலி

காசியாபாத்தில் மழைக்கு காவல் அலுவலகம் இடிந்து விழுந்ததில் காவலர் ஒருவர் பலியானார். உத்தரப் பிரதேச மாநிலம், காசியாபாத்தில் மழைக்கு உதவி காவல் ஆணையர் அங்கூர் விஹார் லோனி அலுவலகத்தின் கூரை திடீரென இடிந்த... மேலும் பார்க்க

ம.பி.யில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தலித் பெண் பலி

மத்திய பிரதேசத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மத்திய பிரதேசம் மாநிலத்தில் கான்ட்வா மாவட்டத்தில் இருந்து 90 கி.மீ தொலைவில், வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

தாணேவில் 21 வயது இளைஞர் கரோனாவுக்கு பலி

தாணேவில் 21 வயது இளைஞர் கரோனாவுக்கு பலியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், மும்ப்ராவைச் சேர்ந்த 21 வயது நபர் மே 22ஆம் தேதி தாணேயில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் கால்வா மருத்து... மேலும் பார்க்க

அமெரிக்கா: பாகிஸ்தான் எதிர்விளைவைப் பெறும்! சசி தரூர் எச்சரிக்கை!

பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தான் தகுந்த எதிர்விளைவைப் பெறும் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்தார்.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலையடுத்த... மேலும் பார்க்க

தெலங்கானா: உலக அழகிப் போட்டியில் விலைமாது, குரங்கைப்போல உணர்ந்ததாக இங்கிலாந்து அழகி குற்றச்சாட்டு!

தெலங்கானாவில் நடைபெறும் உலக அழகிப் போட்டியில் கண்ணியக் குறைவாக நடத்தப்படுவதாக இங்கிலாந்து அழகி மில்லா மேகி குற்றம் சாட்டியுள்ளார்.தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாதில் 72 ஆவது உலக அழகிப் போட்டி (Miss Worl... மேலும் பார்க்க