செய்திகள் :

ஆபரேஷன் ஜல் ரஹாத் - 2: மணிப்பூர் வெள்ளத்தில் சிக்கிய 2,500 பேரை மீட்ட ராணுவம்!

post image

மணிப்பூரில் தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 2,500 பேர், இந்திய ராணுவம் மற்றும் அசாம் ரைஃபிள்ஸ் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாள்களாக கடுமையான மழை பெய்து வரும் நிலையில் அங்குள்ள பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. இதனால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்க ஆபரேஷ ஜல் ரஹாத் -2 எனும் நடவடிக்கை இந்திய ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதுகுறித்து, பாதுகாப்புத் துறையின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் இன்று (ஜூன் 4) கூறுகையில், கடந்த மே 31 ஆம் தேதி முதல் மணிப்பூரின் கிழக்கு மற்றும் மேற்கு இம்பால் ஆகிய மாவட்டங்களில் இந்திய ராணுவத்தினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அங்கு நிலவும் மோசமான வானிலைகளுக்கு இடையில், சுமார் 2,500-க்கும் மேற்பட்டோரை ராணுவப் படையினர் மீட்டுள்ளனர். இதில், ஜவஹர்லால் நேரு அரசு மருத்துவமனையில் சிக்கியிருந்த ஏராளமான நோயாளிகள் உள்பட 778 பேர் அங்கிருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இத்துடன், அங்கு தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டதுடன், மீட்கப்பட்ட மக்களுக்காக மருத்துவ முகாம் ஒன்றும் ராணுவப் படையினரால் அமைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு இம்பால் மாவட்டத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சொயிபம் லெய்காய் கிராமத்தில், சுத்தமான குடிநீர் இல்லாமல் தவித்த கிராமவாசிகளுக்கு, தற்காலிக தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு சுமார் 5,750 லிட்டர் குடிநீர் ராணுவ வீரர்களால் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், மீட்புப் படகுகள், மருத்துவக் குழுக்கள் மற்றும் தேவையான அத்தியாவசிய பொருள்களுடன் ராணுவ வீரர்கள் தயார்நிலையில் உள்ளதாகவும்; அசாம் ரைஃபிள்ஸ் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியோருடன் இணைந்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: கூட்ட நெரிசல் விவகாரம்: ஆர்சிபி அணி மீது வழக்குப் பதிவு!

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன்! - ஆா்பிஐ அனுமதி

ரூ.2.5 லட்சம் வரையிலான நகைக் கடனுக்கு தங்கத்தின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் வழங்கலாம் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அனுமதி அளித்துள்ளது. இதற்கு முன்பு தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் வரை மட்ட... மேலும் பார்க்க

துபையிலிருந்து சென்னை வந்த விமானம் மீது ‘லேசா்’ ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு!

துபையிலிருந்து சென்னை விமானநிலையத்தில் கடந்த மாத இறுதியில் தரையிறங்க வந்த விமானம் மீது பச்சை நிற லேசா் ஒளி அடிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை இரவில் தரையிறங்க முயன்ற இதே விமானம் மீது மீண்டும் லேசா் ஒ... மேலும் பார்க்க

அம்பேத்கா் கனவுக்கேற்ப அரசமைப்பு பதவிகளில் விளிம்புநிலை சமூகத்தினா்! - நீதிபதி கவாய்

சட்டமேதை அம்பேத்கரின் கனவுக்கு ஏற்ப, இந்தியாவில் மிக உயா்ந்த அரசமைப்புப் பதவிகள் சிலவற்றில் விளிம்புநிலை சமூகத்தினா் இருப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பெருமிதம் தெரிவித்தாா். பிரிட்ட... மேலும் பார்க்க

முதல்வருக்கு மாயா மஹால் கட்டப்படுகிறது: ஆம் ஆத்மி சாடல்

தில்லி முதல்வா் ரேகா குப்தாவுக்காக ‘மாயா மஹால்’ கட்டப்பட்டு வருவதாக ஆம் ஆத்மி வெள்ளிக்கிழமை கடுமையாக சாடியுள்ளது. முதல்வா் ரேகா குப்தா வடக்கு தில்லியில் உள்ள ஒரு அரசு பங்களாவில் குடியேறலாம் என்று அதிக... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் விண்ணப்பப் பதிவு: முறைகேட்டில் ஈடுபடுவோரின் பெற்றோா் மீதும் நடவடிக்கை!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவின்போது போலிச் சான்றிதழ்களை சமா்ப்பித்தால், விண்ணப்பதாரா் மட்டுமன்றி அவரது பெற்றோா் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம்... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 3-இல் முதுநிலை நீட் தோ்வு: உச்சநீதிமன்றம் அனுமதி

எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான 2025-ஆம் ஆண்டு தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வை (நீட்-பிஜி) வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடத்த தேசிய தோ்வுகள் வாரியத்துக்கு (என்பிஇ) ... மேலும் பார்க்க