செய்திகள் :

ஆப்பிள் ஐபோன் 17 ஸ்மார்ட்போனை விமர்சிக்கும் சாம்சங்!

post image

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 வரிசை ஸ்மார்ட்போன்கள் சர்வதேச மின்னணு சந்தையில் அறிமுகமாகியுள்ளன.

ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 17 ஏர் ஆகிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றுடன் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11, ஆப்பிள் வாட்ச் எஸ்இ 13 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3 ஆகிய ஸ்மார்ட் கைக்கடிகாரங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள் குறித்தும் அவற்றின் சிறப்பம்சங்கள் குறித்தும் சமூக வலைதளப் பக்கங்களில் விவாதங்கள் நடந்துகொண்டிருக்கும் நிலையில், ஐபோன் 17 வரிசை ஸ்மார்ட்போன்களை சாம்சங் நிறுவனம் விமர்சித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களில் இதுவரை மடிக்கக்கூடிய வகையிலான தயாரிப்புகள் வெளியாகவில்லை என்பதை சுட்டிக்காட்டி, எக்ஸ் தளப் பக்கத்தில் சாம்சங் பதிவிட்டுள்ளது.

ஆப்பிள் தயாரிப்புகளில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை தயாரிக்கப்போவதில்லை என 2022ஆம் ஆண்டு அந்நிறுவனம் அறிவித்திருந்தது. இதனை விமர்சிக்கும் விதமாக ''இது எப்போது மடங்கும் என்பதை தெரியப்படுத்துங்கள்'' என சாம்சங் 2022ஆம் ஆண்டு பதிவிட்டிருந்தது.

தற்போது ஐபோன் 17 வெளியிடப்பட்டுள்ள நிலையில், அந்தப் பதிவை சுட்டிக்காட்டி, ''இது இப்போதும் பொருந்துகிறது'' எனப் பதிவிட்டுள்ளது.

அதாவது ஐபோன் 17 வரிசை ஸ்மார்ட்போன்களில் ஒன்றுகூட மடிக்கக்கூடிய வகையில் தயாரிக்கப்படவில்லை என்பதை மறைமுகமாக சாம்சங் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், தங்கள் தயாரிப்புகளில் மடிக்கக் கூடிய ஸ்மார்ட்போன்கள் உள்ளதையும் குறிப்பிட்டு தங்கள் பயனாளர்களை ஊக்குவித்து வருகிறது.

மேலும் சமூக வலைதளங்களில் பயனாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு முடியாது என்ற ஹேஷ்டேக்குடன் சாம்சங் பதில் அளித்து வருகிறது. அதாவது, ஆப்பிள் நிறுவனத்தால் மடிக்கக்கூடிய தயாரிப்புகளை மேற்கொள்ள முடியாது என்பதை சுட்டிக்காட்டும் விதமாக சாம்சங் இவ்வாறு செய்து வருகிறது.

இதையும் படிக்க | அறிமுகமானது ஐபோன் 17! முன்பதிவு செய்தால் எப்போது கிடைக்கும்?

iPhone 17 Launch Turns Spicy As Samsung Reignites Foldable Phone Debate

இந்தியாவில் 10 லட்சம் மின்சார வாகனங்கள் அமோக விற்பனை!

புதுதில்லி: 2024-25 ஆம் ஆண்டில் நாட்டில் 10 லட்சத்துக்கும் அதிகமான மின்சார வாகனங்கள் விற்பனை செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது இந்த ஆட்டோமொபைல் சந்தை.அதே வேளையில், இந்தியா தற்போது உலகில் வேகமாக வளர... மேலும் பார்க்க

வரலாறு காணாத சரிவுக்கு பிறகு ரூபாய் மதிப்பு 4 காசுகள் உயர்ந்து ரூ.88.11 ஆக நிறைவு!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் இந்திய ரூபாய் அதன் வரலாறு காணாத குறைந்த அளவிலிருந்து சற்றே மீண்டு வர்த்தகமானது. அந்நிய நிதி வரவு மற்றும் பலவீனமான டாலரின் மதிப்பு ஆகியவற்றால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய... மேலும் பார்க்க

ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: 3வது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

இந்தியா-அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் குறித்த நம்பிக்கையாலும், உள்ளூர் வர்த்தகத்தில் ஐடி மற்றும் மூலதனப் பங்குகள் மீட்சியடைந்ததும், அடுத்த வாரம் நடைபெற உள்ள அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதக... மேலும் பார்க்க

அறிமுகமானது ஐபோன் 17! முன்பதிவு செய்தால் எப்போது கிடைக்கும்?

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 வரிசை ஸ்மார்ட்போன் நேற்று (செப். 9) மின்னணு சந்தைகளுக்கு அறிமுகமானது. ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 17 ஏர் ஆகிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய... மேலும் பார்க்க

புதிய வண்ணங்களில் யமஹா ஆர்15 வரிசை பைக்குகள்!

யமஹா நிறுவனம் ஆர்15 வரிசையில் பைக்குகளை புதிய வண்ணங்களில் அறிமுகம் செய்துள்ளது.யமஹா நிறுவனம் ஆர்15 வரிசையில் ஆர்15எம், ஆர்15 வி4 மற்றும் ஆர்15 எஸ் ஆகிய மூன்று மாடல்களை விற்பனை செய்து வருகின்றது.இந்த ந... மேலும் பார்க்க

3-வது நாளாக ஏற்றத்தில் பங்குச் சந்தை! வங்கி, ஐடி பங்குகள் உயர்வு!

வாரத்தில் தொடர்ந்து 3-வது நாளாக பங்குச் சந்தைகள் இன்று(புதன்கிழமை) உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,504.36 என்ற புள்ளிகளில் ஏற்றத்து... மேலும் பார்க்க