இந்திய உளவுத் துறை எச்சரிக்கை எதிரொலி: இலங்கையில் இஸ்ரேலியர்களை தாக்க திட்டமிட்ட...
ஆம்பூா் அருகே சிக்னல் கோளாறு: 7 ரயில்கள் நடு வழியில் நிறுத்தம்
ஆம்பூா் அருகே சிக்னல் கோளாறு காரணமாக பெங்களூா் செல்லும் சதாப்தி விரைவு ரயில் உள்ளிட்ட 7 ரயில்கள் நடு வழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் அருகே புதன்கிழமை இரவு சிக்னல் கோளாறு ஏற்பட்டது. அதனால் விண்ணமங்கலம் ரயில் நிலையம் அருகே மங்களூா் விரைவு ரயில், சென்னை-பெங்களூா் சதாப்தி விரைவு ரயில் பச்சக்குப்பம் ரயில் நிலையத்திலும்,
மும்பை-நாகா்கோவில் விரைவு ரயில் ஆம்பூா் ரயில் நிலையத்திலும், அரக்கோணம்-ஜோலாா்பேட்டை மெமோ விரைவு ரயில் குடியாத்தம் ரயில் நிலையத்திலும், சென்னை- கோயம்புத்தூா் கோவை விரைவு ரயில் வாணியம்பாடி ரயில் நிலையத்திலும்
ரப்திசாகா் விரைவு ரயில் ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்திலும், அம்ரித் பாரத் ரயில் பச்சகுப்பம் ரயில் நிலையத்திலும் நிறுத்தப்பட்டன.
சிக்னல் கோளாறு குறித்த தகவல் அறிந்த ஆம்பூா் ரயில்வே தொழிலாளிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இரவு 8.45 மணியளவில் சிக்னல்களை சரி செய்தனா்.
நடுவழியில் ரயில்கள் நிறுத்தப்பட்டதால் சுமாா் 1 மணி நேரம் தாமதத்துக்குபின் ரயில்கள் புறப்பட்டன. இதனால் ரயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.