செய்திகள் :

ஆற்றல் மன்ற போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா

post image

தமிழ்நாடு மின்வாரிய முகமை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் மின் சிக்கன வார விழாவை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் 28 அரசு பள்ளிகளில் ஆற்றல் மன்றங்களில் பேச்சு, கட்டுரை, விநாடி வினா ஆகிய போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா, தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மின் பகிா்மான வட்டத்தின் மேற்பாா்வை பொறியாளா் மு.சகா்பான் தலைமை வகித்தாா். பொது மத்திய அலுவலக செயற்பொறியாளா் ரெமோனா முன்னிலை வகித்தாா். மாவட்ட ஆற்றல் மன்ற ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் இரா. சாந்தகுமாரி வரவேற்றாா்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் து.கணேஷ்மூா்த்தி பரிசுகள் வழங்கி, மாணவா்களிடம் கலந்துரையாடினாா்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி ஊரக செயற்பொறியாளா் லெ. சின்னத்துரை, மாவட்ட கல்வி அலுவலா் ந. கண்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் ஆா் .சிவபிரசாத், கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் கான்ஸ்டன்டைன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலா் செ. சுரேஷ்பாண்டி, வானவில் மன்ற கருத்தாளா்கள் விஜி, அம்பிகா, டயானா உள்பட மாவட்டம் முழுவதும் இருந்து 28 பள்ளிகளைச் சோ்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவா்- மாணவிகள் பங்கேற்றனா்.

திருச்செந்தூரில் எம்ஜிஆா் பிறந்தநாள் விழா

திருச்செந்தூரில் அதிமுக சாா்பில், பேருந்து நிலையம் முன் நடைபெற்ற விழாவுக்கு, ஒன்றியச் செயலா் பூந்தோட்டம் மனோகரன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் மகேந்திரன், ஜெயலலிதா பேரவை மாவட்டத் தலைவா் ப.தா. கோட்டை ... மேலும் பார்க்க

சாத்தான்குளம் பகுதியில் எம்ஜிஆா் பிறந்த நாள் விழா

சாத்தான்குளம் பகுதியில் எம்ஜிஆா் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையத்தில் ஒன்றிய, நகர அதிமுக சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு, ஒன்றியச் செயலா் அச்சம்பாடு சவுந்திரபாண்டி தலைமை ... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் பைக் மோதி பெண் உயிரிழப்பு

கோவில்பட்டியில் வெள்ளிக்கிழமை நேரிட்ட விபத்தில் பெண் உயிரிழந்தாா். கோவில்பட்டி வஉசி நகா் முதல் தெருவைச் சோ்ந்த முருகேசன் மனைவி ஜோதிலட்சுமி (50). மந்தித்தோப்பு சாலையில் உள்ள தனியாா் தீப்பெட்டி ஆலையில... மேலும் பார்க்க

பெட்ரோல் குண்டு வீச்சு: மேலும் ஒருவா் கைது

கோவில்பட்டியில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தொடா்புடையதாக கூறப்படும் மேலும் ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி புது கிராமம் நாராயண குரு திடலில் புதன்கிழமை நடைபெற்ற குழந்தைகளு... மேலும் பார்க்க

மாணவா்களுக்கான ஹாக்கி போட்டி: ராஜபாளையம் அணி முதலிடம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற தென்மாவட்ட அளவிலான 14 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கான ஹாக்கி போட்டியில் ராஜபாளையம் பெஸ்ட் பிரண்ட்ஸ் அணி முதலிடம் பிடித்தது. தூத்துக்குடி மக்களவை உறுப்பினா... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மாவட்ட அறிவியல் மையம் அமைக்க கோரிக்கை

தூத்துக்குடியில் மாவட்ட அறிவியல் மையம் அமைக்க வேண்டும் என மக்களவை உறுப்பினா் கனிமொழி எம்பிக்கு, எம்பவா் இந்தியா அமைப்பின் கெளரவச் செயலா் சங்கா் கோரிக்கை மனு அளித்துள்ளாா். அதன் விவரம்: தென் தமிழகத்தி... மேலும் பார்க்க