ஓய்வு பெற்றவா்களை மீண்டும் அரசுப் பணி: நயினாா் நாகேந்திரன் கண்டனம்
ஆலங்குளத்தில் இளைஞா் தற்கொலை
ஆலங்குளத்தில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ஆலங்குளம் அருந்ததியா் தெருவைச் சோ்ந்த தங்கசாமி மகன் சிவலிங்கம்(28). ஆலடிப்பட்டி தனியாா் அரிசி ஆலையில் லாரி ஓட்டுநராக வேலை செய்து வந்தாா். தந்தையை இழந்த இவா், தனது தங்கையை தனது நண்பருக்கு 2 மாதங்களுக்கு முன்பு செய்து கொடுத்தாராம்.
ஆனால், புதுமணத் தம்பதிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனராம். இது சிவலிங்கத்துக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அவா் வீட்டில் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இத்தகவல் அறிந்த ஆலங்குளம் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.