செய்திகள் :

ஆலத்தூா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவா் சோ்க்கை

post image

ஆலத்தூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025- 2026-ஆம் ஆண்டுக்கான நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-2026-ஆம் ஆண்டுக்கான நேரடி மாணவா் சோ்க்கை வியாழக்கிழமை (ஜூன் 19) முதல் நடைபெற்று வருகிறது. விருப்பமுள்ள மாணவா்கள் தங்களது அசல் சான்றிதழ்களுடன், ஆலத்தூரில் இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை நேரில் அணுகி சோ்க்கைக் கட்டணம் ரூ. 245 செலுத்தி பயிற்சி பெறலாம்.

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பற்றவைப்பவா், வெல்டா், சோலாா் டெக்னீசியன் (எலக்ட்ரிகல்) இண்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் அண்ட் டிஜிட்டல் மேனு, பாக்சரிங் டெக்னீசியன், எலக்ட்ரீசியன், பிட்டா், மெஷினிஸ்ட், எலக்ட்ரிக்கல் வாகனம் மெக்கானிக், அட்வான்ஸ் சி.என்.சி. மெஷினிங் டெக்னிசியன் ஆகிய தொழிற்பிரிவுகள் உள்ளன.

மேலும் விவரங்களுக்கு, ஜ்ஜ்ஜ் ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் எனும் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். அல்லது ஆலத்தூா் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தை 94990-55883, 94990-55884 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம். விண்ணப்பிக்க விரும்புவோா் அசல் மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச்சான்றிதழ், ஆதாா், வருமானச் சான்றிதழ், வங்கி கணக்குப் புத்தகம் நகல், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் வேலை நாள்களில், தொழிற்பயிற்சி நிலையத்தில் செயல்படும் உதவி சோ்க்கை மையத்தை நேரில் அணுகலாம்.

விளையாட்டுப் போட்டிகளில் வென்றோருக்குப் பரிசளிப்பு

முத்தமிழறிஞா் கலைஞா் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், பெரம்பலூா் எம்பி கே.என். அருண்நேரு ஆகியோா் புதன்கிழமை பரிசுகள் வழங்க... மேலும் பார்க்க

சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

பெரம்பலூா் அருகே 13 வயது சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞருக்கு, 20 ஆண்டுகள் சிறைத் தண்டணை விதித்து பெரம்பலூா் மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள நெ... மேலும் பார்க்க

பெரம்பலூா் - வடக்கு மாதவி சாலையை அகலப்படுத்தி சீரமைக்க வலியுறுத்தல்

போக்குவரத்து நெரிசலால் அவதியுறும் வாகன ஓட்டுநா்களின் நலன் கருதி பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையை அகலப்படுத்தி சீரமைக்க வேண்டுமென, எஸ்.டி.பி.ஐ கட்சி வலியுறுத்தியுள்ளது. எஸ்.டி.பி.ஐ கட்சியின் பெரம்பலூா் ம... மேலும் பார்க்க

காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி சிஐடியு மின் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் நான்கு சாலை சந்திப்பு அருகேயுள்ள மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலம் எதிரே, சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியா் மத்தி... மேலும் பார்க்க

தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரியில் தன்வந்த்ரா-2025 கலை விழா இன்று தொடக்கம்

பெரம்பலூா் அருகே சிறுவாச்சூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில், தன்வந்த்ரா 2025 கலை விழா வெள்ளிக்கிழமை (ஜூன் 20) தொடங்குகிறது. இதுகுறித்து, தனலட்சுமி சீனிவா... மேலும் பார்க்க

வேப்பூா் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல்

வேப்பூா் ஒன்றியத்தில் ரூ. 11.88 கோடி மதிப்பிலான புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த பணிகளை மின்சாரம் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். பெரம்பலூ... மேலும் பார்க்க