செய்திகள் :

"ஆளுங்கட்சிக்கு வயித்தெறிச்சல்; அந்த திருஷ்டிதான் நடக்கும் சம்பவங்களுக்குக் காரணம்"-அன்புமணி பேச்சு

post image

முடிவுறாத கதையாக நீண்டுகொண்டிருக்கிறது ராமதாஸ் - அன்புமணி மோதல் விவகாரம்.

கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 13) பாமக நிறுவனர் ராமதாஸ் 'கடைசி மூச்சு இருக்கும் வரை நானே தலைவர்' என்று அறிவித்து தனது மகன் அன்புமணி தலைவர் பதவிக்கு ஆசைப்படுவதாக குற்றம் சாட்டி பேசியிருந்தார்.

இதையடுத்து தந்தையர் தினமான இன்று (ஜூன் 15)  திருவள்ளூரில் பாமக பொதுக்குழு கூட்டத்தில், "இன்று தந்தையர் தினம். மருத்துவர் ஐயா உள்ளிட்ட உலகில் உள்ள அனைத்து தந்தையர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். மருத்துவர் ஐயா நீண்ட ஆயுள், ஆரோக்கியம், மன நிம்மதி, மகிழ்ச்சியோடு 100 ஆண்டுகள் வாழ வேண்டும். அது மகனாக என்னுடைய கடமை." என்று பேசியிருந்தார்.

அன்புமணி - ராமதாஸ்
அன்புமணி - ராமதாஸ்

`கோபம் இருந்தால் மன்னித்து விடுங்கள்; இது நீங்கள் உருவாக்கிய கட்சி'- ராமதாஸ் குறித்து பேசிய அன்புமணி

இப்படியாக ராமதாஸ் - அன்புமணி மோதல் விவகாரம் பாமக'வில் தொடர்ந்து சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது. இந்நிலையில் மதுராந்தகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில், "நம் மாநாட்டுக்கு வந்த கூட்டத்தைப் பார்த்து ஆளுங்கட்சிக்கு வயித்தெறிச்சல்; அந்த வயித்தெறிச்சலில் வந்த திருஷ்டிதான் கட்சியில் தற்போது நடக்கும் சம்பவங்கள். ஆனாலும் அந்த திருஷ்டி எல்லாம் போய்விட்டது” என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

'தமிழ்நாட்டில் 18 லட்சம் மக்களுக்கு ஒரு எம்.பி; பீகாரில் 30 லட்சம்..!' - திடீர் சர்ச்சையின் பின்னணி

இந்த ஆண்டு நவம்பர் மாதம் பீகார் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலுக்கான பிரசாரங்கள் பீகாரில் சூடு பிடித்து வருகிறது. இந்த நிலையில், பாஜக கூட்டணியில் இருக்கும் ரா... மேலும் பார்க்க

`சீமானின் சட்டவிரோத கள் இறக்கும் போராட்டத்தை தடை செய்ய காவல்துறை தவறியது ஏன்?’ - டாக்டர் கிருஷ்ணசாமி

"கள் இறக்க அனுமதி இல்லை என அறிந்தும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை பெரியதாழையில் சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 'கள்' இறக்க அனுமதித்தது ஏன்?" என்று புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி எழ... மேலும் பார்க்க

`தந்தை அம்பேத்கர், 'பிரதமர் பதவியை கைப்பற்றுங்கள்' என்று தான் வழிகாட்டியிருக்கிறார்’ - திருமாவளவன்

திருச்சியில் சனிக்கிழமை மாலை 'மதசார்பின்மை காப்போம்' என்ற தலைப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் டி.வி.எஸ் பகுதியில் இருந்து திருச்சி மாநகராட்சி அலுவலகம் வரை 3 கிலோ... மேலும் பார்க்க

Israel - Iran : `இந்தியா பாகிஸ்தானை போல ஈரான் இஸ்ரேலும்...’ - சொன்னதையே சொல்லும் ட்ரம்ப்

ஜூன் 13 அன்று, இஸ்ரேல் 'ஆபரேஷன் ரைசிங் லயன்' என்ற பெயரில் ஈரானில் உள்ள நடான்ஸ், கோண்டாப், கோர்ராமாபாத்தில் உள்ள அணுசக்தி நிலையங்கள், இராணுவ தளங்கள், ஏவுகணை உற்பத்தி தளங்கள் ஆகிய170 க்கும் மேற்பட்ட இடங... மேலும் பார்க்க

'ட்ரம்ப் பார்ட்னர் நான்' - ட்ரம்பை கொல்ல இருமுறை ஈரான் முயற்சியா? - நெதன்யாகு குற்றச்சாட்டு என்ன?

இஸ்ரேல் - ஈரான் இடையே தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது. நேற்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஃபாக்ஸ் நியூஸ் செய்தி சேனலுக்கு நேர்காணல் ஒன்றை தந்துள்ளார். அதில் அவர் அமெரிக்க அதிபர் ட்ரம்பை ஈரான் இரண்டு முற... மேலும் பார்க்க