செய்திகள் :

ஆளுநர் அரசியல் கண்ணோட்டத்துடன் செயல்படக்கூடாது! -உச்சநீதிமன்ற தீர்ப்பு தெரிவிப்பது என்ன?

post image

தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மசோதாக்கள் சில, உரிய காரணமின்றி காலதாமதப்படுத்தப்பட்டு வருவதாக ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு தரப்பிலிருந்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் இன்று உச்சநீதிமன்றத்தால் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு மீண்டும் அனுப்பப்படும் மசோதாக்களை அவா் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வருவதாகவும் தமிழகத்தின் மூன்று பல்கலைக்கழகங்களில் துணை வேந்தா்களின் நியமன விவகாரத்தில் ஆளுநரின் தலையீடு அதிகரிப்பதாகவும் கூறி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடா்ந்திருந்தது.

இந்த வழக்குகளில் விசாரணை கடந்த பிப். 10-ஆம் தேதி நிறைவுற்றிருந்த நிலையில், தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில், தமிழக பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட பத்து மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டத்துக்கு எதிரானது என்று குறிப்பிட்டிருக்கும் உச்சநீதிமன்றம், மாநில அரசின் ஆலோசனைப்படியே ஆளுநர் செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில், ஆளுநருக்கான அதிகார வரையறை என்ன? என்பது உச்சநீதிமன்றம் இன்று(ஏப். 8) பிறப்பித்துள்ள தீர்ப்பில் தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே. பி. பார்திவாலா, ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

  • “ஆளுநருக்கான மாண்பை நாங்கள் தரம் குறைக்கவில்லை. அதேவேளையில், ஆளுநரானவர் நாடாளுமன்ற ஜனநாயகத்தின்கீழ் செயல்பட வேண்டுமென்கிறோம். அதன்படி, மக்கள் சட்டப்பேரவை வழியாக பிரதிபலிக்கும் தங்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்தும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசுக்கும் மதிப்பளித்து ஆளுநர் செயல்பட வேண்டுமென்கிறோம்”.

  • “ஆளுநர் தமது கடமையை ஒரு தோழராக, ஆலோசகராக, வழிகாட்டியாக விருப்பு வெறுப்பின்றியும், அரசியல் கண்ணோட்டங்களைக் கருத்திற்கொண்டு நடந்துகொள்ளாது, அரசமைப்பின் மீது தாம் எடுத்துக்கொண்ட பதவிப்பிரமாணத்தின்படியும் செயல்பட வேண்டும்.”

  • ஆளுநர் தூண்டுகோலாக இருக்க வேண்டுமே தவிர, தடை ஏற்படுத்துபவராக இருக்கக்கூடாது. அவரது அனைத்து செயல்களும் தமது உயர்பதவியின் மாண்பை மனதிற்கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டும். அவர் தமது கடமைகளை நம்பிக்கைத்தன்மையுடன் செயல்படுத்திட வேண்டும்”.

  • “ஒரு மாநிலத்தின் அரசமைப்பு தலைவராக திகழும் ஆளுநர் அம்மாநில மக்களின் நலனுக்கும் விருப்பத்திற்கும் இணங்கவும், அரசு நிர்வாகத்துடன் இணக்கமாகவும் செயல்பட வேண்டும்”.

  • “உயர்பதவிகளை வகிக்கும் அரசமைப்பு அதிகாரத்திலிருப்போர் அரசமைப்பின் மாண்புகளையும் விழுமியங்களையும் வழிகாட்டியாகக் கொண்டிருக்க வேண்டும். நமது முன்னோர்களின் பல்லாண்டு போராட்டங்களாலும் தியாகங்களாலும் விளைந்த இவை, இந்திய மக்களால் போற்றப்படுபவை என்பதை கருத்திற்கொள்ள வேண்டும்.

    ஒரு முடிவெடுக்கும் விவகாரத்தில், இத்தகைய அதிகாரப் பதவியுடையோர் அரசியல் காரணங்களைக் கண்டுகொள்ளாது, அரசமைப்பை வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும்”.

  • “ஆளுநர் அரசியல் காரணங்களுக்காக, மக்களின் விருப்பத்தை உடைக்கும் விதத்தில் சட்ட பேரவைக்கு தடைக்கற்களை ஏற்படுத்தாது இருப்பதை கவனத்திற்கொள்ள வேண்டும்.

    மக்களின் நலனுக்காக செயலாற்றிட, மக்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டப்பேரவையானது எடுக்கும் தீர்மானங்கள் அனைத்தும், மக்களின் முடிவுகளாகவே பார்க்கப்படுகின்றன. அப்படியிருக்கும்போது, மாநில சட்டப்பேரவைக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையும் அரசமைப்புச் சாசனத்தின் மீது எடுத்துக்கொண்ட சத்தியப்பிரமாணத்தை மீறுவதாகவே அமையும்”.

இதையும் படிக்க:மாநில ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் இல்லை: உச்ச நீதிமன்றம்

உ.பி.: 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மூடல்

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் தகுதியில்லாத நபா்களால் நடத்தப்பட்டுவந்த 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட தலைமை மருத்து அதிகாரி தருண் கு... மேலும் பார்க்க

ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்திருக்கும் ஆயுத ஏற்றுமதி: ராஜ்நாத் சிங்

‘2014-ஆம் ஆண்டில் ரூ. 600 கோடியாக இருந்த ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாட ஏற்றுமதி தற்போது ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்துள்ளது’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

வணிகா்களுக்கு 7 நாள்களுக்குள் ஜிஎஸ்டி பதிவு: அதிகாரிகளுக்கு சிபிஐசி அறிவுறுத்தல்

வணிகா்கள் விண்ணப்பித்த 7 நாள்களுக்குள் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) அறிவுறுத்தியுள்ளது. ஜிஎஸ்டி பதிவில் ... மேலும் பார்க்க

நியோமேக்ஸ் மோசடி வழக்கு: ரூ.600 கோடி சொத்து முடக்கம் அமலாக்கத் துறை நடவடிக்கை

பண மோசடியில் ஈடுபட்ட மதுரையைச் சோ்ந்த நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. மதுரை எஸ்.எஸ்.காலனியை தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவ... மேலும் பார்க்க

பஞ்சாபில் பயங்கரவாத தாக்குதல்களில் தொடா்புடைய இந்தியா் அமெரிக்காவில் கைது

பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடா்புடையதாக இந்தியாவால் தேடப்பட்டு வரும் சீக்கியரை அமெரிக்காவில் அந்நாட்டு புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ கைது செய்துள்ளது. பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ... மேலும் பார்க்க

‘யுனெஸ்கோ’ உலக நினைவுப் பதிவேட்டில் பகவத் கீதை, நாட்டிய சாஸ்திரம்: பிரதமா் மோடி பெருமிதம்

‘யுனெஸ்கோ’ உலக நினைவுப் பதிவேட்டில் பகவத் கீதை மற்றும் பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் ஆகியவற்றின் அரிய கையெழுத்துப் பிரதிகள் சோ்க்கப்பட்டுள்ளன. இது, ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமைக்குரிய தருணம் என்று... மேலும் பார்க்க