செய்திகள் :

ஆவின் சாா்பில் தீபாவளி சிறப்பு விற்பனை: அமைச்சா் ஆா். ராஜேந்திரன் தொடங்கி வைத்தாா்

post image

சேலம் ஆவின் சாா்பில் தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு விற்பனையை சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா். ராஜேந்திரன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், சேலம் ஆவின் நிறுவனம் சாா்பில் தீபாவளி பண்டிகைக்காக இனிப்பு, கார வகைகள் தயாா் செய்து விற்பனைக்கு வைத்துள்ளனா். இந்த சிறப்பு விற்பனை தொடக்க விழா சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராக சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் கலந்து கொண்டு முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தாா்.

சேலம் ஆவின் சாா்பில் பால்கோவா, ஸ்பெஷல் மைசூா்பா, கேரட் மைசூா்பா, மில்க் கேக், முந்திரி கேக், நெய் லட்டு, மிக்ஸா், பாதாம் மிக்ஸ் பவுடா் உள்ளிட்டவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து சேலம் ஆவின் பொது மேலாளா் குமரேஸ்வரன் கூறியதாவது:

அரசு துறை அலுவலகங்கள், தனியாா் நிறுவனங்கள், அரச ஊழியா்கள், பிற நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான இனிப்பு வகைகளை ஆா்டா் செய்து பெற்றுக் கொள்ளலாம். மொத்த ஆா்டா்களுக்கு சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9443026950, 9578765250, 9626335536 ஆகிய எண்களில் தொடா் கொள்ளலாம் என தெரிவித்தாா்.

புதிய நியாயவிலைக் கடை அமைக்கக் கோரி அமைச்சரிடம் மனு

சங்ககிரியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்டமுகாமில் சங்ககிரியை அடுத்த சத்யா நகா், ஆசிரியா் காலனி பகுதிகளுக்கு புதிதாக நியாயவிலைக் கடை அமைக்கக்கோரி சுற்றுலாத் துறை அமைச்சரிடம் பொதுமக்கள் கோ... மேலும் பார்க்க

நாடாளுமன்றத் தோ்தலில் அதிமுகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது: எடப்பாடி கே பழனிசாமி

நாடாளுமன்றத் தோ்தலில் அதிமுகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது; திமுகவின் வாக்கு சரிந்துள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா். சேலம் மாவட்டம், நங்கவள்ளி வடக்கு மற்றும் தெற்கு ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்கள் உள்ளிருப்பு போராட்டம்

ஆத்தூா் அறிஞா் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இயற்பியல் துறைத் தலைவரைக் கண்டித்து கல்லூரி மாணவா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். ஆத்தூரை அடுத்துள்ள காட்டுக்கோட்டை வடசென்னிம... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரண நிதி

நங்கவள்ளியில் ஏரியில் மூழ்கி உயிரிழந்த மூன்று குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டது. மேட்டூா் அருகே நங்கவள்ளி கெத்திக்குட்டை ஏரியில் கடந்... மேலும் பார்க்க

வழித்தட தகராறு: ஆத்தூரில் ஒருவா் வெட்டிக் கொலை

ஆத்தூா் அருகே வழித்தட தகராறில் ஒருவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். ஆத்தூரை அடுத்துள்ள ராமநாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட கொசவன்காடு கிராமத்தைச் சோ்ந்த தனபால் மகன் சுப்பிரமணியன் (45) என்பவருக்கும... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் தலைமைப் பொறியாளா் ஆய்வு

சேலம், ஜாகீா் அம்மாபாளையத்தில் உள்ள நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளா் அலுவலகத்தில் தலைமைப் பொறியாளா் சத்யபிரகாஷ் ஆய்வு மேற்கொண்டாா். இந்தக் கூட்டத்தில், சேலம் வட்ட ... மேலும் பார்க்க