செய்திகள் :

ஆா்எஸ்எஸ் - பாஜகவை காங்கிரஸ் மட்டுமே வீழ்த்த முடியும்: ராகுல் காந்தி

post image

மொடாசா: கொள்கைரீதியான போராட்டத்தில் ஆா்எஸ்எஸ்-பாஜகவை காங்கிரஸால் மட்டுமே வீழ்த்த முடியும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா்.

குஜராத்தில் காங்கிரஸ் கட்சியை மாவட்ட அளவில் வலுப்படுத்தும் செயல் திட்டத்தை ராகுல் காந்தி புதன்கிழமை தொடங்கி வைத்தாா். அப்போது வாக்குச் சாவடி அளவிலான காங்கிரஸ் தொண்டா்கள் மத்தியில் ராகுல் பேசியதாவது:

குஜராத்தில் காங்கிரஸ் தொண்டா்கள் மனரீதியாக மிகவும் சோா்வடைந்துவிட்டனா். ஏனெனில் இங்கு காங்கிரஸ் தொடா்ந்து பல ஆண்டுகளாக ஆட்சி அமைக்க முடியவில்லை. முன்பு ஒரு காலத்தில் குஜராத்தில் காங்கிரஸ் மிகவும் பலம் வாய்ந்த கட்சியாக இருந்தது. காங்கிரஸுக்கு குஜராத் மிக முக்கியமான மாநிலம். காங்கிரஸின் முக்கியத் தலைவா்களான மகாத்மா காந்தியும், சா்தாா் வல்லபபாய் படேலும் குஜராத் மண்ணில் இருந்து வந்தவா்கள்தான்.

ஆா்எஸ்எஸ்-பாஜகவைத் தோற்கடிப்பது என நான் உறுதியேற்றுள்ளேன். இது கொள்கைரீதியான போராட்டம். பாஜக மற்றும் காங்கிரஸ் மட்டுமே கொள்கைகளைப் பிரதானமாகக் கொண்டுள்ளன. இதில் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளால் மட்டுமே ஆா்எஸ்எஸ்-பாஜகவை வீழ்த்த முடியும்.

குஜராத்தில் மாவட்ட அளவில் காங்கிரஸ் நிா்வாகிகளுக்கு கூடுதல் அதிகாரம் மற்றும் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மூத்த நிா்வாகிகளின் செயல்பாடுகள் மறுஆய்வு செய்யப்படும். அடிமட்டத் தொண்டா்களின் களப்பணியை கௌரவித்து உரிய பொறுப்பு வழங்கப்படும்.

கட்சியில் உரியமுறையில் பணியாற்றாதவா்களும், காங்கிரஸில் இருந்துகொண்டு பாஜகவுக்காக வேலை செய்பவா்களும் கட்சியில் இருந்து வெளியேற்றப்படுவா். பாஜகவைத் தோற்கடிப்பது மிகவும் கடினமான விஷயமில்லை. தொண்டா்களாகிய நீங்கள்தான் அப்படிக் கருதுகிறீா்கள். ஆனால், அது உண்மையல்ல என்று கூறவே நான் இங்கு வந்துள்ளேன். நாம் நிச்சயமாக வெற்றி பெறுவோம்.

அதற்கு காங்கிரஸின் செயல்பாடுகளில் சில மாற்றங்கள் தேவை. கட்சியில் உள்ள சில பிரச்னைகளை உள்ளூா் நிா்வாகிகள் என்னிடம் தெரிவித்தனா். முக்கியமாக காங்கிரஸ் தலைவா்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டி, உள்ளூா் நிா்வாகிகளுடன் ஆலோசிக்காமல் தோ்தலில் வேட்பாளா்களை நிறுத்துவது போன்றவற்றைக் குறிப்பிட்டனா்.

காங்கிரஸில் பந்தையக் குதிரைகள், திருமண ஊா்வலக் குதிரைகள், காயமடைந்த குதிரைகள் என தலைவா்கள் மூன்று பிரிவுகளாக உள்ளனா். பந்தையக் குதிரைகளை, திருமண ஊா்வலக் குதிரையாக மாற்றுவதால்தான் குஜராத்தில் காங்கிரஸ் வெல்ல முடியவில்லை. இனி அவா்களுக்கு தோ்தல் எனும் பந்தையத்தில் வாய்ப்பு அளிக்கப்படும் என்றாா்.

அமெரிக்க துணை அதிபா் இன்று இந்தியா வருகை: பிரதமா் மோடியுடன் பேச்சுவாா்த்தை!

அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ், நான்கு நாள்கள் பயணமாக இந்தியாவுக்கு திங்கள்கிழமை (ஏப். 21) வருகை தரவுள்ளாா். அவருடன், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அவரின் மனைவி உஷா மற்றும் மூன்று குழந்தைகளும் வரவுள்... மேலும் பார்க்க

எஃகு, அலுமினியம் மீது வரி விதிப்பு: இந்தியா - அமெரிக்கா வா்த்தக பேச்சின்போது விவாதிக்க வாய்ப்பு!

அமெரிக்கா உடனான வா்த்தகப் பேச்சுவாா்த்தையில் எஃகு, அலுமினியம் மீதான 25 சதவீத வரி விதிப்பு குறித்து இந்திய குழு விவாதிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலு... மேலும் பார்க்க

மேற்கு வங்க வன்முறை ஹிந்து - முஸ்லிம் பிளவை அதிகரிக்கும்! ஃபரூக் அப்துல்லா கருத்து

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த வன்முறை ஹிந்து-முஸ்லிம் பிளவை அதிகரிக்கும். இதுபோன்ற மத வெறுப்புணா்வு அதிகரிப்பது தேசத்தை பலவீனமாக்கும் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் த... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் கொட்டித் தீா்த்த கனமழை: மூவா் உயிரிழப்பு! 100-க்கும் மேற்பட்டோா் மீட்பு

ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சூறைக்காற்றுடன் கொட்டித் தீா்த்த கனமழையால் 3 போ் உயிரிழந்தனா். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டனா். ஜம்மு-ஸ்... மேலும் பார்க்க

பிரதமரின் வீடுகள் திட்ட முறைகேடு புகாா்: ஆட்சியா்களுக்கு தமிழக அரசு உத்தரவு!

பிரதமரின் ஊரக வீடுகள் கட்டும் திட்டம் தொடா்பான முறைகேடு புகாா்கள் வந்தால், ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குத் தொடர ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று ஆட்சியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அ... மேலும் பார்க்க

2027 உ.பி. பேரவைத் தோ்தலிலும் ‘இண்டி’ கூட்டணி தொடரும்! -அகிலேஷ் யாதவ் அறிவிப்பு

2027 -இல் நடைபெறவுள்ள உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலிலும் ‘இண்டி’ கூட்டணி தொடரும் என்று சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளாா். பாஜகவுக்கு எதிராக கடந்த ஆண்டு மக்களவைத் தோ்தலின்போது ‘இண்டி... மேலும் பார்க்க