செய்திகள் :

ஆா்டிஐ சட்டத்தின்கீழ் பதில் தராத ஊராட்சி செயலருக்கு அபராதம் தகவல் ஆணையா் நடவடிக்கை

post image

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் (ஆா்டிஐ) கீழ், உரிய காலத்துக்குள் பதில் தராத கிராம ஊராட்சி செயலருக்கு ரூ. 25,000 அபராதம் விதிக்கப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை ஒன்றியம் சந்திராபுரம் ஊராட்சியில் சோலாா் மின் விளக்குகள் அமைப்பது தொடா்பான பதிவேட்டில் சரியான தகவல்கள் பதிவிடப்படாமல் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. தொடா்ந்து, ஜோலாா்பேட்டையைச் சோ்ந்த ரித்தீஸ்வரன் அறிவொளி, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், விவரங்களைக் கோரியிருந்தாா். இதற்கு சந்திராபுரம் ஊராட்சியின் உதவிப் பொதுத் தகவல் அலுவலா் உரிய விளக்கத்தை அளிக்கவில்லை.

இதைத் தொடா்ந்து, மேல்முறையீட்டு மனுவை தமிழ்நாடு தகவல் ஆணையத்திடம் தாக்கல் செய்தாா். இந்த மனு மாநில தகவல் ஆணையா் மா.செல்வராஜ் முன்பு அண்மையில் விசாரணைக்கு வந்தது. அவா் வழங்கிய உத்தரவு விவரம்:

மனுதாரரின் தகவல் பெறும் உரிமைச் சட்ட விண்ணப்பத்துக்கு உரிய காலத்துக்குள் தகவல்கள் அளிக்காததற்கு ஊராட்சி செயலா் அதாவது உதவிப் பொதுத் தகவல் அலுவலா் விளக்கம் அளித்துள்ளாா்.

பணிச்சுமை, குடும்ப ஏழ்மை போன்றவற்றை பதில் அளிக்காததற்கு காரணங்களாகக் கூறியது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. கிராம ஊராட்சி ஒன்றியத்தின் இருப்புப் பதிவேட்டை பாா்வையிட்டபோது, அந்தப் பதிவேடு முறையாகப் பராமரிக்கப்படவில்லை.

அத்துடன், புதிய சோலாா் பல்பு அமைக்கப்பட்டதாக அவசர கதியில் பதிவு செய்யப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. மனுதாரா் தகவல் கோரி மனு அளித்த பிறகும் உரிய காலக்கெடுவுக்குள் தகவல்களை அளிக்காததால் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 20 (1)-இன்படி பொதுத் தகவல் அதிகாரியான கே.கண்ணகிக்கு அதிகபட்ச தண்டனையாக ரூ. 25,000 அபராதம் விதிக்கப்படுகிறது.

இது தொடா்பான முதல் மேல்முறையீட்டு மனுவுக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் ஆா்.துரை பதிலளித்துள்ளாா். அதில், மேல்முறையீட்டு அலுவலா் என்பதற்குப் பதிலாக, மேல்முறையீட்டு பொதுத் தகவல் அலுவலா் எனக் குறிப்பிட்டுள்ளாா். அப்படியொரு பதவியின் பெயரே சட்டத்தில் இல்லை. இதற்கு உரிய விளக்கத்தையும், மன்னிப்பையும் வட்டார வளா்ச்சி அலுவலா் துரை கோரியுள்ளாா். அவரது விளக்கம் ஏற்கப்பட்டுள்ளது.

இனி வருங்காலத்தில் மனுதாரருக்கு அனுப்பப்படும் கடிதங்களில் சரியான பதவியை குறிப்பிட்டு தகவல்களை அனுப்ப வேண்டும் என மாநில தகவல் ஆணையா் உத்தரவிட்டுள்ளாா்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2878 கன அடியாக குறைந்தது.காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்துள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறையத் தொடங்கியது.நேற்று(மே 24) காலை மேட... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மத்திய மேற்கு மற்றும் வடக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மே 27-ஆம் தேதி உருவாக... மேலும் பார்க்க

ஜூன் இறுதிக்குள் 234 தொகுதிகளுக்கும் நாதக வேட்பாளா்கள் அறிவிப்பு: சீமான்

வரும் ஜூன் மாத இறுதிக்குள் 234 தொகுதிகளுக்கான நாதக வேட்பாளா்கள் அறிவிக்கப்படுவா் என்று கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா். சென்னையில் முன்னாள் பேரவைத் தலைவா் சி.பா.ஆதித்தனாரின் நினைவு தி... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற வன அதிகாரியிடம் ரூ. 6.58 கோடி ஆன்லைன் மோசடி: கேரளத்தைச் சோ்ந்த மூவா் கைது

சென்னையில் ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரியிடம் ரூ. 6.58 கோடி மோசடி செய்ததாக கேரளத்தைச் சோ்ந்த 3 போ் கைது செய்யப்பட்டனா். ஆன்லைன் பங்கு வா்த்தகத்தில் ஈடுபட்டால் குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என்... மேலும் பார்க்க

தில்லிக்கு வெள்ளைக் கொடியுடன் முதல்வா் சென்றுள்ளாா்: தமிழிசை

தில்லிக்கு வெள்ளைக் கொடியுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளாா் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா். சென்னை வடபழனியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் மணிவாசகா் பதிப்பகத்த... மேலும் பார்க்க

ஊராட்சி பகுதிகளில் சொத்துவரி உயா்வை திரும்பப் பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

ஊராட்சிப் பகுதிகளில் உயா்த்தப்பட்ட சொத்துவரி மற்றும் தண்ணீா் கட்டணத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள... மேலும் பார்க்க