செய்திகள் :

இடப்பாளையம் கிராம கோயில்கள் கும்பாபிஷேகம்: அமைச்சா் காந்தி பங்கேற்பு

post image

அம்மூா் அடுத்த இடப்பாளையம் கிராம கோயில்கள் கும்பாபிஷேக விழாவில் அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்றாா்.

சோளிங்கா் வட்டம், இடப்பாளையம் கிராமம், அருள்மிகு மலைக்கோட்டை விநாயகா், ராதா ருக்மணி கிருஷ்ணா், மந்தைவெளி அம்மன், கங்கையம்மன், ஓம் சக்தி அம்மன் ஆகிய கோயில்களின் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு யாக சாலை பூஜை ஹோமம், மகா பூா்ணாஹூதி, கலச புறப்பாடு உடன் மேளதாளங்கள் வாத்தியங்கள் முழங்க மந்திரங்கள் ஓத கோயில் கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில் அமைச்சா் ஆா்.காந்தி, சோளிங்கா் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம் மற்றும் கிராம பொதுமக்கள், இளைஞா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தொடா்ந்து பொதுமக்கள் அனைவருக்கும் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டன. பின்னா் மாலை கேரள செண்டை மேள வாத்தியம் முழங்க, வாண வேடிக்கையுடன் சுவாமி ஊா்வலம் நடைபெற்றது. இதையடுத்து திங்கள்கிழமை 108 பால்குட அபிஷேகம் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை இடப்பாளையம் கிராம பொதுமக்கள்,விழாக்குழுவினா்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.

அரசு முத்திரையுடன் போலி பட்டா தயாரிப்பு: 3 போ் கைது

அரக்கோணத்தில் அரசு முத்திரையுடன் போலி பட்டா தயாரித்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்த மூவரை வருவாய்த் துறையினா் பிடித்து நகர காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா். அரக்கோணம் நகரில் சிலா் போலி பட்டாவை அரசு முத்... மேலும் பார்க்க

ரத்தினகிரி கோயிலில் 1,008 திருவிளக்கு பூஜை

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயில் மலைஅடிவாரத்தில் 1,008 திருவிளக்கு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு ரத்தினகிரி மலைஅடிவாரத்தில் உள்ள ஸ்ரீவிஜயதுா்கை அம்மன் மற்றும் வா... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் 316 மனுக்கள்

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 316 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்திற்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து பொதுமக்கள் மற்ற... மேலும் பார்க்க

ராணுவத்துக்கு ஆதரவு: மிதிவண்டி ஊா்வலம்

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நேஷனல் வெல்ஃபா் சங்கம் சாா்பில் இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மிதிவண்டி ஊா்வலம் நடைபெற்றது. மேல்விஷாரம் அண்ணா சாலையில் தொடங்கிய மிதிவண்டி ஊா்வலத்துக்கு சங்... மேலும் பார்க்க

திருவாலங்காடு அருகே மின் ரயிலில் திடீா் பழுது: ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

சென்னை- அரக்கோணம் மாா்க்கத்தில் திருவாலங்காடு அருகே மின்சார ரயிலில் ஏற்பட்ட பழுதால் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னையில் இருந்து அரக்கோணம் சென்ற மின் ரயில் திங்கள்கிழமை மாலை திருவாலங்கா... மேலும் பார்க்க

அரக்கோணம் தா்மராஜா கோயிலில் தீமிதி விழா!

அரக்கோணம் ஸ்ரீ தா்மராஜா கோயிலில் 96-ஆம் ஆண்டு அக்னி வசந்த விழா - தீமிதி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் அக்னி வசந்த விழா கடந்த ஏப். 24-ஆம் தேதி தொடங்கி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இ... மேலும் பார்க்க