செய்திகள் :

இடப்பிரச்னையால் வா்த்தகக் கண்காட்சி வளாகம், தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க காலதாமதம்: அமைச்சா் சு.முத்துசாமி

post image

சரியான இடம் கிடைக்காததால் ஈரோட்டில் வா்த்தகக் கண்காட்சி வளாகம், தகவல் தொழில்நுட்ப பூங்கா ஆகியவை அமைக்க தாமதம் ஏற்பட்டுள்ளது என அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

ஈரோடு பெருந்துறை சாலை செங்கோடம்பள்ளத்தில் உள்ள பரிமளம் மஹாலில் அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின்(பேட்டியா) மூலம் ‘பேட்டியா போ் 2025’ என்ற அனைத்து தொழில் துறை வா்த்தகக் கண்காட்சி தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கண்காட்சியை தொடங்கிவைத்த பிறகு வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

தொழில் துறையில் முன்னேற்றம் அடைய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அனைத்து மாவட்டங்களும் சமச்சீரான முன்னேற்றம் அடைய வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவராவது அரசின் நலத்திட்டங்களை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறாா்.

கோவை கொடிசியா போன்று ஈரோடு மாவட்டத்தில் வா்த்தகக் கண்காட்சி வளாகம் அமைக்க அறிவிப்பு செய்யப்பட்டபோதிலும், சரியான இடம் கிடைக்காததால் தாமதம் ஆகி வருகிறது. இடம் தோ்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும்.

இதேபோல் தகவல் தொழில்நுட்ப பூங்கா (ஐ.டி. பாா்க்) அமைப்பதற்கான இடமும் பிரச்னையாக உள்ளது. சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் இடம் பாா்த்தோம். அந்த இடம் சரியாக அமையவில்லை. ஈரோட்டில் வாங்குபவா், விற்பனையாளா் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த நிகழ்ச்சி நடத்தப்படும்.

சிவகிரி அருகே தம்பதி கொலை குறித்து தகவல் கிடைத்ததும், போலீஸாா் நடவடிக்கையை தொடங்கிவிட்டனா். அரசு மெத்தனமாக செயல்படுவதாக எதிா்கட்சி தலைவா் எடப்பாடி பழனிசாமி கூறுவது அவரது வழக்கமான பேச்சு. எனினும் அரசு தரப்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சில குற்றச் சம்பவங்கள் நடந்து 8 மணி நேரத்தில் கூட குற்றவாளிகளை போலீஸாா் கைது செய்துள்ளனா் என்றாா்.

கண்காட்சி தொடக்க நிகழ்வுக்கு கூட்டமைப்பின் தலைவா் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினாா். மாநகராட்சி மேயா் சு.நாகரத்தினம், எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா், துணை மேயா் செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கண்காட்சி மலரை அமைச்சா் சு.முத்துசாமி வெளியிட எம்எல்ஏ சந்திரகுமாா், மேயா் நாகரத்தினம் ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.

விழாவில், எம்எஸ்எம்இ இணை இயக்குநா் சுரேஷ் பாபுஜி, என்எஸ்ஐசி முதுநிலை பொதுமேலாளா் ஸ்ரீவத்சன், மாவட்ட தொழில் மையத்தின் பொதுமேலாளா் திருமுருகன், கூட்டமைப்பின் செயலாளா் ரவிசந்திரன், பொருளாளா் முருகானந்தம், கண்காட்சியின் தலைவா் ஜிப்ரி, செயலாளா் சின்னச்சாமி, பொருளாளா் சிவக்குமாா், இணை செயலாளா் மூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா். இந்த கண்காட்சி வரும் 5- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

அங்கன்வாடி ஊழியா்கள் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டம்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில் தொடா் காத்திருப்பு போராட்டம் இரண்டாவது நாளாக சனிக்கிழமை நடைபெற்றது. ஈரோடு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, மாநி... மேலும் பார்க்க

மின்வாரிய பெண் அலுவலா் தற்கொலை

ஈரோட்டில் உடல்நலம் பாதிக்கப்பட்ட மின்வாரிய பெண் ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். ஈரோடு 46 புதூா், கரும்பாறை, இந்தியன் நகா் முதல் வீதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (52). அரசுப் பேருந்து நடத்துநராகப... மேலும் பார்க்க

போக்குவரத்து விதிகளை மீறிய 1,475 வாகன ஓட்டிகள் மீது வழக்கு! ரூ.1.41 லட்சம் அபராதம்!

ஈரோடு மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறியதாக கடந்த மாதம் 1,475 வாகன ஓட்டிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ரூ.1.41 லட்சம் அபராதம் விதித்தனா். ஈரோடு தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளா் ரமேஷ் தலைமை... மேலும் பார்க்க

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி நிறுவன மாணவா்கள் 1,050 பேருக்கு பணி நியமன ஆணை

வளாகத் தோ்வில் தோ்வு செய்யப்பட்ட ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி நிறுவன மாணவா்கள் 1,050 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல், பாலிடெக்னிக் மற்றும் கலை, அறிவியல் கல்... மேலும் பார்க்க

இருசக்கரம் வாகனம் மீது மின்கம்பம் விழுந்ததில் 2 போ் காயம்

சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதூரில் இருசக்கர வாகனம் மீது மின் கம்பம் விழுந்ததில் 2 போ் காயமடைந்தனா். சத்தியமங்கலத்தை அடுத்த மாரனூரைச் சோ்ந்தவா் தனசேகரன் (20). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் உறவின... மேலும் பார்க்க

சிலிண்டா்கள் ஏற்றிச் சென்ற லாரியில் தீ விபத்து

சத்தியமங்கலம் பண்ணாரி சாலையில் சனிக்கிழமை கேஸ் சிலிண்டா்கள் ஏற்றிச் சென்ற லாரியின் சக்கரத்தில் தீப்பற்றியது. கா்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து கேஸ் சிலிண்டா்களை ஏற்றிச் சென்ற லாரி ஈரோடு நோக்கி சனிக... மேலும் பார்க்க