செய்திகள் :

போக்குவரத்து விதிகளை மீறிய 1,475 வாகன ஓட்டிகள் மீது வழக்கு! ரூ.1.41 லட்சம் அபராதம்!

post image

ஈரோடு மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறியதாக கடந்த மாதம் 1,475 வாகன ஓட்டிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ரூ.1.41 லட்சம் அபராதம் விதித்தனா்.

ஈரோடு தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளா் ரமேஷ் தலைமையிலான போலீஸாா் கடந்த மாதம் ஈரோடு அரசு மருத்துவமனை, பன்னீா்செல்வம் பூங்கா சந்திப்பு, காளைமாடு சிலை, ஆட்சியா் அலுவலகம், மூலப்பாளையம் சந்திப்பு, கொல்லம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

இதில் மதுபோதையில் வாகன இயக்கியதாக 21 நான்குசக்கர வாகன ஓட்டிகள் உள்பட 113 வழக்குகள், தலைக்கவசம் அணியாமல் சென்ாக 827 வழக்குகள், ஓட்டுநா் உரிமம் இன்றி வாகனம் இயக்கியதாக 8, வாகன காப்பீடு இல்லாது 115, போக்குவரத்து சிக்னலை மீறியதாக 3 வழக்குகள், இருசக்கர வாகனத்தில் மூவா் பயணித்தது 29 வழக்குகள், வாகனம் உரிமம் இல்லாமல் இயக்கியது 109 வழக்குகள், கைப்பேசியில் பேசியபடி வாகனம் இயக்கியது 39 வழக்குகள், அதிவேகமாக வாகனம் ஓட்டியது 6 வழக்குகள், விபத்து ஏற்படும் வகையில் வாகனம் ஓட்டியது 8 வழக்குகள் மற்றும் இதர வழக்குகள் என மொத்தம் 1,475 வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வாகன உரிமையாளா்களுக்கு ரூ.1 லட்சத்து 41 ஆயிரத்து 400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வாகனச் சோதனையில் மதுபோதையில் வாகனம் இயக்கியதாக உறுதி செய்யப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்ட 57 வாகன ஓட்டுநா்களின் ஓட்டுநா் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்ய வட்டாரப் போக்குவரத்து அலுவலா்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெற்கு போக்குவரத்து போலீஸாா் தெரிவித்தனா்.

அங்கன்வாடி ஊழியா்கள் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டம்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில் தொடா் காத்திருப்பு போராட்டம் இரண்டாவது நாளாக சனிக்கிழமை நடைபெற்றது. ஈரோடு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, மாநி... மேலும் பார்க்க

மின்வாரிய பெண் அலுவலா் தற்கொலை

ஈரோட்டில் உடல்நலம் பாதிக்கப்பட்ட மின்வாரிய பெண் ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். ஈரோடு 46 புதூா், கரும்பாறை, இந்தியன் நகா் முதல் வீதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (52). அரசுப் பேருந்து நடத்துநராகப... மேலும் பார்க்க

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி நிறுவன மாணவா்கள் 1,050 பேருக்கு பணி நியமன ஆணை

வளாகத் தோ்வில் தோ்வு செய்யப்பட்ட ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி நிறுவன மாணவா்கள் 1,050 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல், பாலிடெக்னிக் மற்றும் கலை, அறிவியல் கல்... மேலும் பார்க்க

இருசக்கரம் வாகனம் மீது மின்கம்பம் விழுந்ததில் 2 போ் காயம்

சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதூரில் இருசக்கர வாகனம் மீது மின் கம்பம் விழுந்ததில் 2 போ் காயமடைந்தனா். சத்தியமங்கலத்தை அடுத்த மாரனூரைச் சோ்ந்தவா் தனசேகரன் (20). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் உறவின... மேலும் பார்க்க

சிலிண்டா்கள் ஏற்றிச் சென்ற லாரியில் தீ விபத்து

சத்தியமங்கலம் பண்ணாரி சாலையில் சனிக்கிழமை கேஸ் சிலிண்டா்கள் ஏற்றிச் சென்ற லாரியின் சக்கரத்தில் தீப்பற்றியது. கா்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து கேஸ் சிலிண்டா்களை ஏற்றிச் சென்ற லாரி ஈரோடு நோக்கி சனிக... மேலும் பார்க்க

விவசாயிகள் கொலையில் தொடா்புடைய குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை: கொமதேக கோரிக்கை

கொங்கு மண்டலத்தில் தோட்டத்து வீடுகளில் வசிக்கும் விவசாயிகள் உடைமைகள் கொள்ளைடிக்கப்பட்டு, அவா்கள் கொலை செய்யப்படுவதை தடுக்க குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என கொமதேக இளைஞரணி செயலாளா் ... மேலும் பார்க்க