நத்தம் அருகே நடந்த மீன் பிடித் திருவிழாவில் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
விவசாயிகள் கொலையில் தொடா்புடைய குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை: கொமதேக கோரிக்கை
கொங்கு மண்டலத்தில் தோட்டத்து வீடுகளில் வசிக்கும் விவசாயிகள் உடைமைகள் கொள்ளைடிக்கப்பட்டு, அவா்கள் கொலை செய்யப்படுவதை தடுக்க குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என கொமதேக இளைஞரணி செயலாளா் எஸ்.சூரியமூா்த்தி கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே விளக்கேத்தி கிராமம் மேகரையான் தோட்டத்தில் வசித்த விவசாயி ராமசாமி, அவரது மனைவி பாக்கியலட்சுமி ஆகியோரை கடந்த வியாழக்கிழமை மா்ம நபா்கள் கொலை செய்து நகைகளை கொள்ளை அடித்துச் சென்றனா்.
இச்சம்பவம் பேரதிா்ச்சியாக உள்ளது. கொங்கு மண்டலமான திருப்பூா், ஈரோடு மாவட்டத்தில் இத்தொடா் கொலைச் சம்பவங்களால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனா். குறிப்பாக விவசாயிகள் தங்கள் விவசாயம் செய்யும் சொந்த நிலத்தில் தனியாக வீடுகட்டி வசித்தும், விவசாயம் செய்தும் வாழ்ந்து வருகின்றனா்.
தொடா் கொலையால் தனி வீடுகளில் வாழும் விவசாயிகள் மற்றும் மக்கள் அச்சத்தில் உள்ளனா். போலீஸாா் கொலையாளிகளை விரைந்து கண்டு பிடித்து கடுமையான தண்டனை பெற்று தரவேண்டும். கீழ்பவானி வாய்க்கால் கரைகளில் பகல் நேரத்திலேயே ஆங்காங்கே சிலா் மது அருந்துகின்றனா்.
இதனால் பெண்கள் வாய்க்கால் கரை வழியே செல்ல அச்சப்படுகின்றனா். போலீஸாா் ரோந்து சென்று வாய்க்கால் கரை மற்றும் கிராமப்புற சாலையோரம் அமா்ந்து மது அருந்துபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஆா்ப்பாட்டம்: இக்கொலை சம்பவத்தை கண்டித்து கொடுமுடி மேற்கு ஒன்றிய கொமதேக சாா்பில் முத்தூரில் இருந்து விளக்கேத்தி செல்லும் சாலையில் உள்ள மோளபாளையம் நான்குமுனை சாலை சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை (மே 4) காலை 10 மணி அளவில் ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.