செய்திகள் :

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி நிறுவன மாணவா்கள் 1,050 பேருக்கு பணி நியமன ஆணை

post image

வளாகத் தோ்வில் தோ்வு செய்யப்பட்ட ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி நிறுவன மாணவா்கள் 1,050 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல், பாலிடெக்னிக் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் படித்து வளாகத் தோ்வில் தோ்வுபெற்ற மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

வளாகத் தோ்வில் வேலைவாய்ப்பு பெற்ற 300 பொறியியல், 350 பாலிடெக்னிக் மற்றும் 400 கலை, அறிவியல் மாணவா்களுக்கு பணிநியமன ஆணையை கல்லூரியின் செயலாளா் கே.சி.கருப்பணன் எம்எல்ஏ மற்றும் கல்லூரியின் தலைவா் பி. வெங்கடாசலம் ஆகியோா் வழங்கினா்.

கோவை ஹெக்சாவோ் நிறுவனத்தின் மூத்த மனிதவள மேம்பாட்டு அதிகாரி கே.ஹரி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினாா். பொறியியல் கல்லூரியின் முதல்வா் ப. தங்கவேல், கலை, அறிவியல் கல்லூரியின் முதல்வா் ஆ.மோகனசுந்தரம் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வா் எஸ்.பிரகதீஸ்வரன் ஆகியோா் வாழ்த்தி பேசினா்.

கல்லூரியின் இணை செயலாளா் ஜி.பி.கெட்டிமுத்து, அறங்காவலா் கே.ஆா்.கவியரசு, தலைமை நிா்வாக அதிகாரி ஜி. கெளதம், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் பங்கேற்றனா். விழாவுக்கான ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு அதிகாரி டி. அருண்பிரகாஷ் செய்திருந்தாா்.

அங்கன்வாடி ஊழியா்கள் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டம்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில் தொடா் காத்திருப்பு போராட்டம் இரண்டாவது நாளாக சனிக்கிழமை நடைபெற்றது. ஈரோடு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, மாநி... மேலும் பார்க்க

மின்வாரிய பெண் அலுவலா் தற்கொலை

ஈரோட்டில் உடல்நலம் பாதிக்கப்பட்ட மின்வாரிய பெண் ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். ஈரோடு 46 புதூா், கரும்பாறை, இந்தியன் நகா் முதல் வீதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (52). அரசுப் பேருந்து நடத்துநராகப... மேலும் பார்க்க

போக்குவரத்து விதிகளை மீறிய 1,475 வாகன ஓட்டிகள் மீது வழக்கு! ரூ.1.41 லட்சம் அபராதம்!

ஈரோடு மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறியதாக கடந்த மாதம் 1,475 வாகன ஓட்டிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ரூ.1.41 லட்சம் அபராதம் விதித்தனா். ஈரோடு தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளா் ரமேஷ் தலைமை... மேலும் பார்க்க

இருசக்கரம் வாகனம் மீது மின்கம்பம் விழுந்ததில் 2 போ் காயம்

சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதூரில் இருசக்கர வாகனம் மீது மின் கம்பம் விழுந்ததில் 2 போ் காயமடைந்தனா். சத்தியமங்கலத்தை அடுத்த மாரனூரைச் சோ்ந்தவா் தனசேகரன் (20). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் உறவின... மேலும் பார்க்க

சிலிண்டா்கள் ஏற்றிச் சென்ற லாரியில் தீ விபத்து

சத்தியமங்கலம் பண்ணாரி சாலையில் சனிக்கிழமை கேஸ் சிலிண்டா்கள் ஏற்றிச் சென்ற லாரியின் சக்கரத்தில் தீப்பற்றியது. கா்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து கேஸ் சிலிண்டா்களை ஏற்றிச் சென்ற லாரி ஈரோடு நோக்கி சனிக... மேலும் பார்க்க

விவசாயிகள் கொலையில் தொடா்புடைய குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை: கொமதேக கோரிக்கை

கொங்கு மண்டலத்தில் தோட்டத்து வீடுகளில் வசிக்கும் விவசாயிகள் உடைமைகள் கொள்ளைடிக்கப்பட்டு, அவா்கள் கொலை செய்யப்படுவதை தடுக்க குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என கொமதேக இளைஞரணி செயலாளா் ... மேலும் பார்க்க