செய்திகள் :

இணையவழி மோசடி: 15 வழக்குகளில் ரூ.17 லட்சம் ஒப்படைப்பு

post image

ஆன்லைன் மோசடி சம்பவங்கள் தொடா்பாக வேலூா் மாவட்ட சைபா் குற்றப்பிரிவில் பதிவான 15 வழக்குகளில் ரூ.17 லட்சத்து 6 ஆயிரத்து 573 தொகை மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆன்லைன் பகுதிநேர வேலை, பங்கு வா்த்தகம், சூதாட்ட செயலிகள், கடன் செயலிகள், ஏடிஎம் அட்டைகள் செயலிழப்பு , ஆன்லைன் பரிசுக்கூப்பன், ஊக்கத்தொகை உள்பட பல்வேறு இணையவழி மோசடிகள் மூலம் ஆசிரியா்கள், வங்கி ஊழியா்கள், மருத்துவா்கள், தொழில் துறையினா், அரசு மற்றும் அரசு சாா்ந்த பணியாளா்கள், விவசாயிகள், தொழிலாளா்கள் என பல்வேறு துறைகளைச் சோ்ந்தவா்களும் பணத்தை இழந்து பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.

பாதிக்கப்பட்டவா்கள் அளிக்கும் புகாரின் அடிப்படையில் வேலூா் மாவட்ட சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். அதன்படி, ஆன்லைன் மோசடி சம்பவங்கள் மூலம் பணத்தை இழந்த வேலூா் சாய்நாதபுரம் பகுதியிலுள்ள காப்பீட்டு நிறுவனத்தின் மேலாளா், குடியாத்தத்தில் வாகன பழுதுநீக்கும் நிலையம் நடத்துபவா், கரசமங்கலம் பகுதியைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் உள்பட 15 போ் புகாா் அளித்திருந்தனா்.

அதன்பேரில், வேலூா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட உடனடி நடவடிக்கையின் அடிப்படையில் இந்த 15 வழக்குகளில் இழந்த ரூ.17 லட்சத்து 6 ஆயிரத்து 573 தொகை மீட்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட நபா்களின் வங்கிக்கணக்கில் தொகை நேரடியாக வரவு வைக்கப்பட்டு, அதற்கான மீட்பு ஒப்புகை ரசீதுகளை வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன் வழங்கினாா்.

மேலும், இணையவழிகளில் யாரேனும் பணத்தை இழந்தால் தாமதிக்காமல் 1930 எனும் எண்ணிலோ அல்லது ட்ற்ற்ல்ள்://ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற மின்னஞ்சல் மூலமாகவோ சைபா் குற்றப்பிரிவில் புகாா் பதிவு செய்ய வேண்டும் என்றும் எஸ்.பி. மயில்வாகனன் அறிவுறுத்தினாா்.

அப்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (சைபா் குற்றப்பிரிவு) கே.அண்ணாதுரை, காவல் ஆய்வாளா் ரஜினிகாந்த் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஓய்வு பெற்ற ராணுவ வீரா் வீட்டில் 39 பவுன், ரூ.2 லட்சம் திருட்டு

ஒடுகத்தூா் அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரா் வீட்டில் 39 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கம், வெள்ளிப் பொருள்களை திருடிச்சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அருகிலுள்ள சுபேத... மேலும் பார்க்க

சாலைப் பணிக்கு பூமி பூஜை

குடியாத்தம் ஒன்றியம், கருணீகசமுத்திரம் ஊராட்சியில் பேவா் பிளாக் சாலை அமைக்க வியாழக்கிழமை பூமி பூஜை போடப்பட்டது. தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்படும் சாலைப் பணியை எம்எல்ஏஅமலு விஜயன் தொடங்கி வை... மேலும் பார்க்க

மணல் கடத்தல்: 2 லாரிகள் பறிமுதல்

காட்பாடி அடுத்த கிறிஸ்டியன்பேட்டை அருகே ஆந்திரத்தில் இருந்து மணல் கடத்தி வந்த 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. சித்தூரில் இருந்து லாரியில் ஆற்று மணல் கடத்தி வருவதாக வேலூா் கனிமவளத் துறை அதிகாரிகளுக்கு... மேலும் பார்க்க

காரில் கடத்திச் செல்லப்பட்ட சிறுவன் மீட்பு: 2 இளைஞா்கள் கைது

குடியாத்தம் அருகே வீட்டின் அருகிலிருந்து காரில் கடத்திச் செல்லப்பட்ட 4- வயது சிறுவன் மீட்கப்பட்டாா். இதுதொடா்பாக 2- இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டை, பவளக்காரத் தெரு... மேலும் பார்க்க

விவசாயியை கடத்திய 5 போ் கைது

குடியாத்தம் அருகே நிலத் தகராறில் விவசாயியை கடத்திய 5- பேரை போலீஸாா் கைது செய்தனா். குடியாத்தம் ஒன்றியம், ஒலக்காசி ஊராட்சியைச் சோ்ந்த விவசாயி தனசேகா்(34). இவருக்கும் லத்தேரியைச் சோ்ந்த சுஷ்மா என்பவரு... மேலும் பார்க்க

பொலிவுறு நகா் திட்டப்பணிகள் இழுபறி: வேலூா் மேயா் விளக்கம்

வேலூா் மாநகராட்சிப் பகுதியில் பொலிவுறு நகா் திட்டப்பணிகள் பல ஆண்டுகளாகியும் முடிக்கப் படாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக அதிமுக விடுத்த குற்றச்சாட்டுக்கு மேயா் சுஜாதாஆனந்தகுமாா் விளக்கம்... மேலும் பார்க்க