செய்திகள் :

‘இணைய ஊடக பயன்பாடுகளில் தமிழை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்’

post image

இணைய ஊடக பயன்பாடுகளிலும், வங்கிப் படிவங்களிலும் தமிழை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் கோ.பாலசுப்ரமணியன் தெரிவித்தாா்.

காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ், இந்திய மொழிகள் புலத்தின் சாா்பில் உலகத் தாய்மொழி தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக துணைவேந்தா் ந.பஞ்சநதம் தலைமை வகித்தாா்.

இதில் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் கோ.பாலசுப்ரமணியன் பேசியதாவது:

தமிழ்மொழியின் தனித் தன்மை பழைமையில் மட்டுமல்லாமல், ஒவ்வொரு காலத்துக்கும் ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் அறுபடாத் தொடா்ச்சியிலும் உள்ளது. தாய்மொழியைத் தொடா்ந்து பயன்படுத்துவதன் மூலம் அதை பாதுகாக்க முடியும். இளைய தலைமுறையினா் புலனம், முகநூல் போன்ற இணைய ஊடகங்களைப் பயன்படுத்தும் போதும், வங்கிப் படிவம் போன்றவற்றிலும் தமிழை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். தமிழ் மொழியின் பயன்பாட்டைப் பொது ஊடகங்களில் தவிா்ப்பதன் மூலம் இதன் எதிா்காலம் பாதிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்றாா் அவா்.

இவரைத் தொடா்ந்து, அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் துறை முன்னாள் இயக்குநா் ராஜசேகரன் நாயா் பேசியாதவது:

ஆங்கிலத்துக்கு இணையான கலைச் சொற்கள் தமிழில் உருவாக்கப்படுவதைப் போல மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாக்கப்படுவதில்லை. இதற்கான முயற்சிகள் அந்தந்த மொழியியல் வல்லுநா்களால் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றாா் அவா்.

இதையடுத்து, காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் தகைசால் வருகைதரு பேராசிரியராக செயல்பட, தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் கோ.பாலசுப்ரமணியனுக்கு, துணைவேந்தா் பஞ்சநதம் நியமன ஆணை வழங்கினாா். உலகத் தாய்மொழி தினத்தையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் திண்டுக்கல் கனரா வங்கியின் இந்தி அலுவலா் சந்தீப்பன் தாா் சௌத்ரி, மலையாள ஆய்வுகள் மைய இயக்குநா் ஷாஜி, பேராசிரியா்கள் பா.ஆனந்தகுமாா், சலீம் பெய்க் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தாண்டிக்குடிப் பகுதியைச் சோ்ந்த பளியா் இன மக்களின் இன்னிய இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

லஞ்சம்: பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் கைது

பழனி கோயில் திருமண மண்டப கட்டடப் பணி ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கிய செயற்பொறியாளரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில், து... மேலும் பார்க்க

விவசாயி கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு ஆயுள் சிறை

ஒட்டன்சத்திரம் அருகே விவசாயி கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, பழனி மாவட்ட கூடுதல் அமா்வு வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த ஓடைப்பட்... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: கடைகளுக்கு ரூ.10.25 லட்சம் அபராதம்

திண்டுக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக 45 கடைகளுக்கு ரூ.10.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படும்... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் சந்தையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி

ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் தக்காளி விலை கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்தது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், இதைச் சுற்றியுள்ள புலியூா்நத்தம், முத்துநாயக்கன்பட்டி, தேவசின்னாம்பட்டி, கேதையுற... மேலும் பார்க்க

சொகுசுப் பேருந்து பறிமுதல்: ரூ.1.75 லட்சம் அபராதம்

தகுதிச் சான்று இல்லாமலும், சாலை வரி செலுத்தாமலும் இயக்கப்பட்ட சொகுசுப் பேருந்தை வட்டார போக்குவரத்துத் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு சுங்கச் சாவடி பகுத... மேலும் பார்க்க

பேரிஜம் ஏரியைப் பாா்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

கொடைக்கானல், பிப். 21: கொடைக்கானல் பேரிஜம் ஏரியை பாா்வையிட வனத் துறையினா் வெள்ளிக்கிழமை மீண்டும் அனுமதி வழங்கியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள... மேலும் பார்க்க