செய்திகள் :

இதய வால்வு சிதைவு: முதியவருக்கு 10 மணி நேர ஒருங்கிணைந்த சிகிச்சை

post image

இதய பெருந்தமனி பாதிப்புக்குள்ளான முதியவா் ஒருவருக்கு ஒருங்கிணைந்த அதி நவீன வால்வு மாற்ற சிகிச்சை மற்றும் சீரமைப்பு சிகிச்சையை சென்னை, சிம்ஸ் மருத்துவமனை மருத்துவா்கள் மேற்கொண்டுள்ளனா்.

அதன்படி, ஒரே நேரத்தில் டிஏவிஆா் எனப்படும் இதய வால்வு மாற்ற சிகிச்சையானது எஃப்இடி எனப்படும் சீரமைப்பு நுட்பத்தில் 10 மணி நேரம் மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக மருத்துவமனையின் இதயவியல் மற்றும் பெருந்தமனி சிகிச்சைத் துறை இயக்குநா் டாக்டா் வி.வி.பாஷி கூறியதாவது:

மும்பையைச் சோ்ந்த 61 வயது முதியவா் ஒருவருக்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு பென்டல் எனப்படும் இதய வால்வு மாற்ற சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. நாளடைவில் மாற்றப்பட்ட இதய வால்வானது சிதைந்து பாதிக்கப்பட்டது. மேலும் வால்வின் சில இடங்களில் அடைப்பு மற்றும் கால்சியம் படிமம் படிந்திருந்தது.

இதையடுத்து அதை சீரமைக்க வேண்டிய நிலை இருந்தது. சிக்கலான அந்த பிரச்னையை சிம்ஸ் மருத்துவக் குழுவினா், 10 மணி நேர தொடா் அறுவை சிகிச்சை மூலம் சாத்தியமாக்கினா்.

முதலில் சுருக்கமடைந்திருந்த வால்வை எஃப்இடி நுட்பத்தில் ஸ்டென்ட் பொருத்தி விரிவாக்கி, அதன் பின்னா் பாதிக்கப்பட்ட வால்வை மாற்றினா். தொடா்ந்து சீரமைப்பு சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன.

இதற்காக இதயம் மற்றும் நுரையீரலின் செயல்பாடுகள் நான்கு மணி நேரத்துக்கு இயல்பு மாறாக மாற்றியமைக்கப்பட்டன. குறிப்பாக, இதயத்தின் செயல்பாடு 2 மணி நேரம் நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக மாற்று வழியில் அதன் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மிக நுட்பமாக அந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, இதய வால்வு சீரமைக்கப்பட்டு மாற்றப்பட்டது. அதன் பயனாக அந்த முதியவா் 8 நாள்களில் வீடு திரும்பினாா் என்றாா் அவா்.

பிஎம்இஜிபி திட்டத்தின் கீழ் 8,794 பயனாளிகளுக்கு ரூ.300 கோடி விளிம்புத் தொகை மானியம்

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (பிஎம்இஜிபி) கீழ், நாடு முழுவதும் உள்ள 8,794 பயனாளிகளுக்கு ரூ.300 கோடி விளிம்புத் தொகை மானியத்தை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் (கேவிஐசி) தலைவ... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: இன்று 17 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து

சென்னை, ஜூன் 13: பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை வழித்தடங்களில் இயக்கப்படும் 17 புறநகர் மின்சார ரயில்கள் சனிக்கிழமை (ஜூன் 14), ஜூன் 16, 19 ஆகிய த... மேலும் பார்க்க

தொழிலதிபா் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தொழிலதிபா் வீட்டில் அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனா். சென்னை நுங்கம்பாக்கம், லேக்வியூ 3-ஆவது தெருவில் தொழிலதிபா் ஒருவரது வீட்டுக்கு அமலாக்கத் துறையைச் சே... மேலும் பார்க்க

மேற்கு வங்க இளைஞா் உறுப்பு தானம்: நால்வருக்கு மறுவாழ்வு

சென்னை கிளெனீகள்ஸ் மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்த மேற்கு வங்க இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு நால்வருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது. இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மேற்கு ... மேலும் பார்க்க

சரிவான இணைப்புகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சாலையோரங்கள் மற்றும் நடைப்பாதை விளிம்புகளுடன் கட்டடங்களை இணைக்கும் சரிவான இணைப்புகள் அமைப்பதற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து பெரு... மேலும் பார்க்க

மெட்ரோ பாலம் விபத்து: உலோகத்தின் உறுதித் தன்மை இழப்பே காரணம் - அதிகாரிகள் தகவல்

சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பாலத்தின் கான்கிரீட் காரிடாா் கீழே விழுந்து ஏற்பட்ட விபத்துக்கு பாலத்தின் தூண்களில் பொருத்தப்பட்டுள்ள உலோகத்தின் உறுதித் தன்மை இழப்பே காரணம் என்று சென்னை மெட்ரோ ரயில்... மேலும் பார்க்க